நடிகை வசுந்தரா தாஸ் திரையுலகில் பாடகியாக அறிமுகமாகி, தொடர்ந்து கமல் நடித்த ஹேராம் படத்தில் நாயகியாக நடித்தார். |
பின்னர் அஜீத் குமாருக்கு ஜோடியாக சிட்டிசன் படத்தில் நடித்து கலக்கினார். கொலிவுட்டில் குஷ்புக்கு நிகராக ஒரு ரவுண்ட் வருவார் என எதிர்ப்பார்க்கப்பட்டார். இத்துடன் அவருக்கு வாய்ப்புகள் வந்து குவிந்தாலும் வழக்கம் போல, இந்தியில் நடிக்க ஆர்வத்துடன் கிளம்பினார். பாலிவுட்டில் மான்சூன் வெட்டிங்கில் நடித்தார். ஆனால் திடீரென காணாமல் போனார். பெங்களூரை விட்டு மும்பைக்கே நிரந்தரமாகக் குடியேறிய வசுந்தரா, ஒரு மியூசிக்கில் பேண்டில் பாடிக் கொண்டிருந்தார். குரல் பாதிக்கப்பட்டதால் பாடுவதும் நின்றுபோனபோது 4, 5 ஆண்டுகள் கழித்து பின் நதிகள் நனைவதில்லை என்ற படம் மூலம் மீண்டும் பாடகியாகியுள்ளார். இந்தப் படத்துக்கு இசை சௌந்தர்யன், கதை, வசனம் எழுதி நாஞ்சில் பி.சி.அன்பழகன் இயக்குகிறார் |
0 கருத்துகள்:
கருத்துரையிடுக