பெற்றெடுத்த பெண் குழந்தை அப்பாவானார் நடிகர் கார்த்தி. அவரது மனைவி ரஞ்சனிக்கு தனியார் மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் கார்த்தி. இவருக்கும், கோவையை சேர்ந்த ரஞ்சனி என்பவருக்கும் கடந்த 2011ம் ஆண்டு ஜூலை மாதம் 3ம் தேதி திருமணம் நடந்தது.
திருமணத்தை தொடர்ந்து கர்ப்பமான ரஞ்சனிக்கு நேற்று பிரசவ வலி ஏற்பட்டது. இதனையடுத்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்ட ரஞ்சனிக்கு நேற்று அழகான பெண் குழந்தை பிறந்தது. பிரசவத்திற்கு பின்னர் தாயும், குழந்தையும் நலமாக உள்ளார்கள்.
கார்த்திக்கு நேற்று இரட்டிப்பு மகிழ்ச்சி, ஒன்று தனக்கு பெண் குழந்தை பிறந்தது. மற்றொரு சந்தோஷம் அவரது அலெக்ஸ் பாண்டியன் படம் உலகம் முழுக்க நேற்று ரிலீசாகியுள்ளது
0 கருத்துகள்:
கருத்துரையிடுக