திங்கள், 14 ஜனவரி, 2013

வழக்கு எண் நாயகி மனிஷாவின் குரல் சரியில்லையாம்

வழக்கு எண் படத்தின் நாயகி மனிஷாவின் குரல் சரியில்லை என்பதால் அவரால் டப்பிங் பேச முடியவில்லை. பொதுவாக தமிழ் சினிமாவிற்கு வரும் நடிகைகளுக்கு தமிழ் தெரியாது. இதனால் அவர்களுக்கு டப்பிங் மாஸ்டர்களே குரல் கொடுப்பார்கள்.
ஆனால் வழக்கு எண் படத்தில் நடித்த நாயகி மனிஷா, கர்நாடகாவைச் சேர்ந்தவர் என்பதால் ஓரளவுக்கு தமிழ் தெரியுமாம். இதன் காரணமாக சுசீந்திரன் இயக்கும் ஆதலால் காதல் செய்வீர் படத்தில் நடித்து வரும் மனிஷா, தானே டப்பிங் பேச முன்வந்தார். இரண்டு நாட்கள் டப்பிங் ஸ்டியோவிற்கு சென்று டப்பிங் பேச, அவரது குரல் சவுண்ட் இன்ஜினியருக்கு பிடிக்க வில்லையாம். இதனால் மனிஷா இனி டப்பிங் பேச முடியாத சூழ்நிலை உருவாக அவர் மிகுந்த மனவேதனைக்குள்ளாகியுள்ளார். சினிமாவில் ஜெயிக்க சவுண்ட் இன்ஜினியரின் ஆதரவும் தேவை என்பதை உணர்வதாக அவர் தெரிவித்திருக்கிறார்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக