அர்ஜூனின் மகள் ஐஸ்வர்யா பட்டத்து யானை என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகியுள்ளார். இதில் நாயகனாக விஷால் நடிக்கிறார். பூபதி பாண்டியன் இயக்குகிறார். மைக்கேல் ராயப்பன் தயாரிக்கிறார்.
நடிகர்களின் மகள்கள் பலர் சினிமாவுக்கு வந்த வண்ணம் உள்ளனர். அவர்கள் வரிசையில் தற்போது அர்ஜூன் மகள் வந்துள்ளார். ஐஸ்வர்யாவுக்கு சினிமா வாய்ப்பு வந்ததும் மும்பையில் உள்ள நடிப்பு பயிற்சி பள்ளியில் சேர்ந்து படித்தார்.
நடிகையானது குறித்து ஐஸ்வர்யா கூறியதாவது:-
நான் சராசரி பெண்ணாக சினிமாவுக்கு வரவில்லை. நூற்றுக்குநூறு சதவீத உழைப்பை கொடுக்க வேண்டும் என்ற லட்சியத்தில் வந்துள்ளேன். எனது தந்தை அர்ஜூன் சினிமாவில் இருப்பதால் எனக்கு பொறுப்பு அதிகம் உள்ளது. அவர் பெயரை காப்பாற்றுவேன். நடிப்பு பயிற்சி எடுத்துதான் சினிமாவுக்கு வந்துள்ளேன்.
இவ்வாறு ஐஸ்வர்யா கூறினார்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக