மறுநாளே சமாதானத்துக்கு வந்த மர்மம் என்னகண்ணா லட்டு திங்க ஆசையா படத்தின் கதை தன்னுடைய இன்றுபோய் நாளை வா திரைப்படத்தின் அப்பட்டமான காப்பி. இதனால் தனக்கு பெருத்த நஷ்டம், மன உளைச்சல் என்று காவல் துறையில் மோசடி புகார் கொடுத்துவிட்டார் திரைக்கதை திலகம் கே.பாக்யராஜ். இதையடுத்து படம் திட்டமிட்டபடி பொங்கலுக்கு வருமா, அல்லது இன்னும் சில வாரங்கள் தள்ளுமா என்று பலரும் விவாதித்தாலும், பிரச்சனைக்குரியவர்கள் பெரிய மனிதர்கள் என்பதால் சட்டென ஒரு முடிவுக்கு வரக்கூடிய சாத்தியங்கள்தான் அதிகம் என்ற நம்பிக்கையும் இருந்தது.
அந்த நம்பிக்கை வீண் போகவில்லை. பாக்யராஜ் மீது கேஸ் போடுவேன். அவர் நாவை அடக்கிக் கொள்வது நல்லது என்றெல்லாம் பேட்டியளித்த புஷ்பா கந்தசாமி மறுநாளே பாக்யராஜின் வீடு தேடிப் போய்விட்டார். முதலில் ஆத்திரப்பட்டாலும் பேச்சுவார்த்தைக்கு உடன்பட்டாராம் பாக்யராஜ்.
சில பல வட்டமேஜை விவாதங்களுக்கு பின், ஐம்பது லட்சம் பாக்யராஜுக்கும், நடுவில் நுழைந்து பரபரப்பு செய்த உதவி இயக்குனர் நவீனுக்கு ஒரு லட்சமும் கைமாறியதாக தகவல்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக