ஞாயிறு, 30 டிசம்பர், 2012

சமந்தாவின் காதலுக்கு பச்சைக்கொடி காட்டிய பெற்றோர்கள்

நீதானே என் பொன் வசந்தம் படத்தில் நடித்து முடித்த நேரத்தில், உங்களுக்கு காதல் அனுபவம் உள்ளதா? என்று சமந்தாவை நோக்கி கேள்விக்கனைகள் பாய்ந்தபோது, இப்போது இல்லை. ஆனால் படிக்கிற காலத்தில் இருந்தது. பலர் என்னிடம் காதலை வெளிப்படுத்தினர். அதில் ஒருவர் எனக்குப்பிடித்து விட நானும் காதலித்தேன். ஆனால் சில ஆண்டுகளிலேயே அந்த காதல் மாயமாகி விட்டது. அதன்பிறகு நடிக்க வந்தபோது அதை மறந்தே விட்டேன் என்றார்.

ஆனால் நிஜத்தில் சினிமாவுக்கு சம்பந்தமே இல்லாத ஒரு காதலர் சமந்தாவுக்கு இருப்பதாக ஆந்திராவில் இருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. சினிமாவில் நடிக்கத் தொடங்கிய பிறகுதான் அந்த காதலரை சந்தித்தாராம் சமந்தா. இப்போதுகூட இருவரும் அடிக்கடி சந்தித்து மனம் விட்டு பேசுவது தொடர்கிறதாம். ஆனால் சினிமா வட்டாரங்களுக்கு அந்த காதலரை அனுமதிப்பதில்லையாம் அவர். இந்த காதல் சமாச்சாரம் சமந்தாவின் பெற்றோருக்கும் தெரியுமாம். அவர்களும் மகளின் காதலை தண்ணீர் ஊற்றி வளர்த்து வருகிறார்களாம்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக