எனது படத்தின் சஸ்பென்ஸ். இயக்குனர் மோகன்ராஜ்புத்
சத்தியமங்கலம் காட்டு பகுதியில் பேய் கதை படமாகிறது. டைரக்டர் டி,ராஜேந்தரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் மோகன்ராஜ்புத். இவர் இயக்கும் படம் ‘மவுனமான நேரம்Õ. இதுபற்றி அவர் கூறியதாவது:
த்ரில்லிங்காக உருவாகும் காதல் கதைதான். காதலை பேய் கதையோடு சேர்த்து சொல்லி இருக்கிறேன். இதுவரை கையாளாத கதைகளமாக இது இருக்கும். இரண்டு ஹீரோ, இரண்டு ஹீரோயின்கள் நடிக்கின்றனர். யார் பேய் என்பதை யூகிக்க முடியாது.கிளைமாக்ஸ்வரை சஸ்பென்சாகவே இருக்கும்.
இதன் ஷூட்டிங் மூணார், மறையூர், தலக்கோணம், சத்தியமங்கலம், திருப்பதி, சித்தூர், ஊட்டி போன்ற இடங்களில் உள்ள அடர்ந்த காட்டுப் பகுதிகளில் நடந்துள்ளது. ரிஷி, கிரிஷ் ஹீரோ. டெய்சி, மீத்தா ஹீரோயின்கள். மற்றும் எம்.எஸ்.பாஸ்கர், சார்மிளா ஆகியோரும் நடிக்கிறார்கள். குருவாயூரான் ஒளிப்பதிவு. அருணகிரி இசை. தயாரிப்பு கே.ஜெயக்குமார். இவ்வாறு இயக்குனர் மோகன்ராஜ்புத் கூறினார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக