திங்கள், 17 டிசம்பர், 2012

ஐஸ்வர்யாராய் வீட்டிலும் மாமியார்,மருமகள் சண்டை.

 

பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய்க்கும் அவரது மாமியார் ஜெயா பச்சனுக்கும் இடையே பனிப்போர் நடிப்பதாக பேச்சு அடிபடுகிறது.

பாலிவுட் நடிகர்கள் அமிதாப், ஜெயா பச்சனின் மகனான அபிஷேக் பச்சனை நடிகை ஐஸ்வர்யா ராய் மணந்ததில் இருந்து குடும்பத்தில் ஏதாவது பிரச்சனை என்று இதுவரை எந்த செய்தியும் வெளியானதில்லை. விழாக்களில் மாமனார், மாமியார், கணவருடன் ஐஸ்வர்யா கலந்து கொண்டு குடும்த்தோடு போட்டோவுக்கு போஸ் கொடுப்பார்கள்.

இந்நிலையில் ஐஸுக்கும், ஜெயா பச்சனுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது என்று விவரம் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அண்மையில் விளம்பர நிகழ்ச்சிக்காக குஜராத் சென்ற ஐஸ் அம்மாநிலத்தின் வளர்ச்சியையும், மோடியையும் புகழ்ந்து தள்ளிவிட்டு வந்தார். அமிதாப் குஜராத் மாநில சுற்றுலாத்துறை பிராண்ட் அம்பாசிடராக இருந்தாலும் ஜெயா மோடியை வெறுக்கும் சமாஜ்வாடி கட்சியைச் சேர்ந்தவர். ஐஸ் மோடியை புகழ்ந்துவிட்டு வந்தது தான் மாமியார், மருமகளுக்கு இடையே பிரச்சனை ஏற்படக் காரணம்.

இந்நிலையில் புத்தக வெளியீட்டு விழாவுக்கு அமிதாப், அபிஷேக், ஐஸ்வர்யா ராய் ஆகியோர் வந்திருந்தனர். ஆனால் ஜெயா பச்சனைக் காணவில்லை. இதன் மூலம் அவர்களுக்கு இடையே உள்ள பிரச்சனை உறுதி செய்யப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக