ஞாயிறு, 16 டிசம்பர், 2012

காற்றுள்ள போதே தூற்றிக்கொள்ளும் சினேகா-பிரசன்னா ஜோடி

 
 
நடிகை சினேகா தனது கணவர் பிரசன்னாவுடன் சேர்ந்து விளம்பரப் படங்களில் நடிக்கிறார். இதற்காக அவர்கள் பெரும் தொகையை சம்பளமாக வாங்குகின்றனர். திரைநட்சத்திரங்கள் பலரும் விளம்பரப் படங்களில் நடித்து பணம் பார்க்கின்றனர். அதற்கு சினேகா, பிரசன்னா மட்டும் என்ன விதிவிலக்கா.
திருமணத்திற்கு பிறகு சினேகா, பிரசன்னாவை ஜோடியாக நடிக்க வைக்க பல விளம்பர நிறுவனங்கள் அழைக்கின்றன. காற்றுள்ள போதே தூற்றிக்கொள் என்ற பழமொழியை சரியாக புரிந்து வைத்துள்ள இந்த ஜோடி விளம்பரப் படங்களில் நடிக்க பெரிய தொகையை சம்பளமாகக் கேட்கின்றனர். இந்த ஜோடி பிரபலமாக உள்ளதால் நிறுவனங்களும் அவர்கள் கேட்கும் தொகையைத் தருகின்றன.
அவர்களுக்கு விளம்பரப் படங்களில் நடிக்கும் வாய்ப்பு குவிகிறதாம். சினேகா படங்களில் நடித்து சம்பாதித்ததைவிட விளம்பரப் படங்களில் தான் அதிகம் சம்பாதித்துள்ளதாக விவரம் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சினிமா படங்களை விட விளம்பரப் படங்களில் குறைவான நேரத்தில் ஷூட்டிங் முடித்து நிறைய பணமும் சம்பாதிக்கலாமே. நல்ல டெக்னிக் தான்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக