விஸ்வரூபம் படத்துக்கு இவ்வளவு சிக்கல் இருக்கிறது, இந்த நடிகர் சங்கம் என்னதான் செய்து கொண்டிருக்கிறது. இது நடிகை வரலட்சுமி எழுப்பிய கேள்விகளில் ஒன்று. சில தினங்களுக்கு முன் ட்விட்டரில் தன் கருத்தை தெரிவித்திருந்த வரலட்சுமி, விஸ்வரூபம் பிரச்சனையில் இங்கு என்ன நடக்கிறது என்றே எனக்கு தெரியவில்லை. நடப்பதையெல்லாம் பார்க்கும்போது எனக்கு மிகவும் அதிர்ச்சியாக உள்ளது. மேலும் நடிகர் சங்கம் இந்த விடயத்தில் இன்னும் ஏன் மெளனமாக உள்ளது? என்றும் நான் உங்களுக்கு ஆதராவாக இருப்பேன் கமல் சார், என்றெல்லாம் கருத்து கூறியிருந்தார். வரலட்சுமியின் அப்பா சரத்குமார்தான் நடிகர் சங்கத்தின் தலைவர் என்பதும், அவர் அ.தி.மு.க ஆதரவு எம்.எல்.ஏ. என்பதும் வரலட்சுமிக்கு தெரியாதா? போய் தன் அப்பாவிடம் கேட்க வேண்டிய கேள்வியை ட்விட்டரி்ல் கேட்டுக் கொண்டிக்கிறாரே என்று கமெண்ட்கள் பறந்தன கொலிவுட்டில். இன்னொரு பக்கம், இதே கேள்வியைத்தான் விஷாலும் கேட்டிருந்தார். அவரை சங்கத்திலிருந்தே விலக்கும் அளவுக்கு காரசாரமாக விவாதிக்கும் நடிகர் சங்கம், சங்க தலைவர் மகளை மட்டும் கண்டு கொள்ளாமல் விட்டிருப்பது ஏன் என்றும் இப்போது கேள்வி எழுப்பியுள்ளனர். தற்போது விஸ்வரூப பிரச்னை முடிவுக்கு வந்தாலும் வரலட்சுமி கூறிய கருத்துக்கள் கோடம்பாக்கத்தாரின் நெஞ்சில் பதிந்து விட்டது
புதன், 6 பிப்ரவரி, 2013
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக