சனி, 23 பிப்ரவரி, 2013

முன்னணி நாயகியானார் ஹன்சிகா மோத்வானி


தென்னிந்திய படங்களில் நடிக்க ஆர்வம் காட்டும் ஹன்சிகா மோத்வானி கொலிவுட்டின் முன்னணி இடத்தை பிடித்துள்ளார்.
தமிழில் தொடர்ந்து ஏழு படங்களில் நடிக்கும் ஹன்சிகாவின் திகதிக்காக பிரபல இயக்குனர்கள் காத்து நிற்கிறார்கள்.
கடந்த சில மாதங்களாக ஹன்சிகா தினந்தோறும் படப்பிடிப்புக்கு செல்வதாக பட வட்டாரம் கூறுகிறது.
கொலிவுட்டின் பிஸி நடிகையான ஹன்சிகா மோத்வானி ஏப்ரல் மாதம் வரைக்கும் படங்களில் தொடர்ந்து நடிக்கிறார்.
அதற்கு பின்பு தான் சற்று இளைப்பாற திட்டமிட்டுள்ளார். சின்ன வயதிலிருந்தே ஹன்சிகா கடும் உழைப்பை பலமாக எண்ணியிருக்கிறார்.
தெளிவாக திட்டமிட்டு உழைத்து வருகிறார். கொஞ்சம்கூட குழப்பம் இல்லாமல் கைவசம் உள்ள படங்கள் அனைத்தையும் முடித்து தருவதில் உறுதியாக இருக்கிறார்.
இதில் பிடித்த பட வாய்ப்புகளையும் ஏற்று நடிக்கிறார். இயக்குனர் வெங்கட் பிரபுவின் 'பிரியாணி'யில் இளம் ஜர்னலிஸ்ட் கதாபாத்திரத்தில் வருகிறார்.
ஹைதராபாத்தில் நடக்கும் சுந்தர்.சி இயக்கும் படத்தில் பிசியாக நடித்து வருகிறார் என்கிறது பட வட்டாரம்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக