கொலிவுட்டில் 'காதல்' படத்தின் நாயகியாக அறிமுகமானவர் நடிகை சந்தியா.
பின்பு இவர் நடித்த 'டிஷ்யூம்', 'வல்லவன்' படங்களைத் தவிர மற்ற படங்கள் பெரியளவில் வெற்றி பெறவில்லை.
சமீபகாலமாக, தமிழில் போதுமான பட வாய்ப்பு இல்லாததால் தாய்மொழியான மலையாளத்திற்கு போனார்.
ஆனால், அங்கேயும் இவரை யாரும் கதாநாயகி வேடத்துக்கு அணுகவில்லையாம். வெறும் குணச்சித்திர வேடங்களுக்கு இவரை அழைத்தனர்.
அதனால், மீண்டும் தமிழில் பிரவேசிக்க முயற்சி எடுத்த அவருக்கு தற்போது ‘யா யா’ படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. இதிலும், கதாநாயகி வேடமில்லை. சந்தானத்துக்கு ஜோடியாக நடிக்கிறார்.
இப்படத்தில் சந்தானத்தை அவ்வப்போது கலாய்க்கும் பவர் ஸ்டார் சீனிவாசன், சில காட்சிகளில் சந்தியாவையும் கலாய்க்கும் விதமாக காட்சிகள் உள்ளதாம்.
மேலும் சந்தானம், சந்தியா இருவரும் இதற்கு முன்னரே 'வல்லவன்', 'மகேஷ் சரண்யா மற்றும் பலர்' படத்தில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
0 கருத்துகள்:
கருத்துரையிடுக