புதன், 6 பிப்ரவரி, 2013

புடவை கட்டி நடிக்கும் மல்லிகா


பாலிவுட்டின் குத்தாட்ட நடிகை மல்லிகா ஷெராவத், முதன் முறையாக சேலை கட்டி நடிக்க உள்ளாராம். தன் திரைப்பட வாழ்விலேயே மிக வித்தியாசமான ஒரு வேடத்தில் மல்லிகா தற்போது நடித்து வரும் படம் அங்கோலி தேவி. இந்த படம் சில ஆண்டுகளுக்கு முன், இராஜஸ்தானில் பிரபலமாக பேசப்பட்ட பன்வாரி தேவி என்ற பெண்ணின் வாழ்க்கையை மையமாக வைத்து தயாராகிறது. இதுவரை நடித்த படங்களில் அரைகுறை உடையுடன் ஆட்டம் போட்ட மல்லிகா ஷெராவத், இந்த படம் முழுவதும் புடவை அணிந்து தான் நடிக்கிறார். இந்த படத்தில் நான் நடிப்பதாக தகவல்கள் வெளியானதும் ஏராளமான மிரட்டல்கள் வந்தன. ஆனாலும் அதை பொருட்படுத்தாமல் நடிக்கிறேன். படம் முழுவதும் புடவை அணிந்து நடிப்பது ரொம்ப வித்தியாசமான அனுபவமாக உள்ளது. புடவை எனக்கு, வசதியான உடையாக தெரியவில்லை என்கிறார் மல்லிகா

0 கருத்துகள்:

கருத்துரையிடுக