வெள்ளி, 26 ஜூலை, 2013

பட்டத்து யானை. விமர்சனம்


கலகலப்பும் ஆக்க்ஷனும் சேர்ந்து படம் இயக்குவதில் கெட்டிக்காரரான பூபதி பாண்டியன் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் படம். இதிலும் அதே ஆக்க்ஷன் காமெடி கொஞ்சம் வேறு விதமான பிளேவரில் கலக்கிக் கொடுக்க முயற்சித்திருக்கிறார்.
காரைக்குடியில் சமையல்காரராக இருக்கிறார் சந்தானம். அவரிடம் சமையல் வேலைக்கு வந்து சேர்கிறார் விஷால். ஒரு ரவுடியிடம் ஏற்பட்ட பிரச்சினையில் காரைக்குடியை காலி பண்ணிட்டு திருச்சிக்கு இடம் பெயர்கிறது சந்தானம் கோஷ்டி. அங்கு போன இடத்தில் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் ஐஸ்வர்யாவின் அறிமுகம் கிடைக்கிறது. இந்த அறிமுகம் விஷால் மனதில் காதலை விதைக்கிறது. இந்நிலையில் ஐஸ்வர்யாவை திருமணம் செய்து கொள்ள வில்லன் ஒருவன் முயற்சிக்க இருவருக்கும் மோதல் ஏற்படுகிறது. ஐஸ்வர்யாவை அந்த பிரச்சினையில் இருந்து விஷால் எப்படி காப்பாற்றுகிறார் என்பது மீதி கதை.
சந்தானத்தின் 2 லட்ச ரூபாய் அடங்கிய பையை தொலைத்துக் கொண்டு அதைத் தேடுவதிலேயே கால்வாசி படத்தை முடித்துவிடுகிறார்கள். படத்தின் முதல் பாதி சந்தானம் விஷால் நண்பர்களின் சேட்டையுடன் செம கலகலப்பாக நகர்கிறது. இவங்க அடிக்கிற ரகளை போதாது என்று மயில்சாமியும் இவர்களுடன் சேர்ந்து கொள்ள திரையரங்கமே சிரிப்பில் அதிர்கிறது. இடைவேளைக்குப் பிறகு படம் கதையின் ஓட்டத்தில் ஆக்க்ஷனுடன் பயணிக்கிறது.
இரண்டு லட்ச ரூபாயை வைத்திருக்கும் பையை பேருந்தில் ஒரு பெண்ணிடம் கொடுப்பது, அதை அவள் வேறு ஒருவரிடம் மாற்றிக் கொடுக்க, எந்த வித டென்ஷனும் இல்லாமல் அதை எல்லோருமாக சேர்ந்து தேடுகிறார்கள்… லாஜிக் பார்க்க ஆரம்பிச்சா ஏராளமான ஓட்டைகளைக் கண்டுபிடிக்கலாம். விஷாலும் அவர் நண்பர்களும் பணப்பையை தொலைத்த காட்சிகள் சிரிக்க வைத்தாலும் எப்படா இந்த காட்சி முடியும் என்று நினைக்க வைக்கிறது. அந்த அளவுக்கு பை சம்பந்தப்பட்ட காட்சிகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.
விஷால் ஹீரோவாக நடித்திருக்கிறார். ஆக்க்ஷன் காட்சிகளுக்கு பிறகுதான் விஷாலின் முகத்தில் ஒரு களைகட்டியிருப்பதை கவனிக்க முடிகிறது. இவருக்கு ஜோடியாக நடித்திருக்கிறார் ஐஸ்வர்யா அர்ஜூன். என்ன ஒரு என்ன ஒரு அழகியடா என்று விஷால் பாடுகிற அளவுக்கு பெரிய அழகுன்னு சொல்ல முடியலை. ஆனாலும் போகப் போக நம் மனதில் வந்து ஒட்டிக் கொள்கிறார் ஐஸ்வர்யா. விஷாலின் நண்பனாக வருகிறார் நண்டு ஜெகன். ஜாக்பாட் திருடனாக வரும் மயில்சாமி  கலக்கிவிட்டுப் போகிறார். கனாபாலாவின் ஒரு பாடலுக்கு மயில்சாமியை ஆடவிட்டு தூள் பண்ணியிருக்கிறார்கள். ஜான் மைக்கேல் உடன் வரும் அடிதடி ஆசாமிகளின் ரகளையால் இடைவேளைக்குப் பிறகு தியேட்டரில் அடிக்கடி எக்கச்சக்க சிரிப்பு. முக்கியமான வில்லனாக வரும் அண்ணாச்சியும் செம பெர்பாமன்ஸ். ஓரிரு காட்சியில் வரும் நெல்லைசிவா, திருடுறவன் எல்லாம் ஜென்டில்மேன்தான் என்று சொல்வதற்கு தியேட்டரில் விசில் பறக்கிறது. இது போன்று கலகலக்க வைக்கும் வசனங்கள் படம் முழுவதும் தொடர்ந்து வந்து சிரிக்க வைக்கின்றன.
படம் இடைவேளை தொடும் நேரத்திலும் அதன் பிறகுமே பின்னணி இசை என்ற ஒன்று படத்தில் இருப்பது தெரிகிறது. பாடல்கள் ஓகே சொல்ல வைத்தாலும் என்ன ஒரு என்ன ஒரு அழகியடா பாடல் மட்டும் செம மெலடி. ஆனாலும் சிவாஜி நடித்த எங்கள் தங்க ராஜா படத்தில் வரும் இரவுக்கும் பகலுக்கும் இனியென்ன வேலை என்ற பாடலின் அப்பட்டமான காப்பி. சண்டைக்காட்சிகளில் ஆன்டனி செமயாக எடிட்டிங் செய்திருக்கிறார். தேவைப்படும் இடங்களில் மட்டும் ஸ்லோ மோஷன் வைத்து சண்டைக் காட்சிகளில் சீட் நுனிக்கே வர வைக்கிறார் ஆன்டனி.
படத்தை இயக்கியிருக்கிறார் பூபதி பாண்டியன். ஏற்கனவே இவரும் விஷாலும் இணைந்து மலைக் கோட்டை படத்தை காமெடி மற்றும் ஆக்க்ஷன் கலந்து எடுத்திருந்தார்கள். இந்தப் படத்தையும் அதே போன்ற ஆக்க்ஷன் மற்றும் காமெடி சேர்த்து எடுத்திருக்கிறார் பூபதி பாண்டியன்

திங்கள், 22 ஜூலை, 2013

ரஜினி ஆல்பத்துக்கு ஷாருக்- - தீபிகா நடனம்


ரஜினி பற்றிய இசை ஆல்பத் துக்கு ஷாருக்கான், தீபிகா படுகோன் லுங்கி கட்டிக்கொண்டு நடனம் ஆடினார்கள். ராப் பாடகர் ஹனி சிங், பாலிவுட் பட அதிபர் புஷன் குமார் இருவரும் இணைந்து ரஜினி பற்றிய இசை ஆல்பம் உருவாக்குகின்றனர். இதற்கு தலைவர் என்று பெயரிட்டுள்ளனர். இந்த பாடலுக்கு நடனம் ஆடுவதற்காக ஷாருக்கானிடம் கேட்டபோது உடனடியாக ஒப்புக்கொண்டார். இது பற்றி ஷாருக்கான் கூறும்போது, ரஜினிக்கு எல்லோருமே ரசிகர்களாகத்தான் இருப்பார்கள். அவரை பற்றி உருவாகும் தலைவர் இசை ஆல்பத்தில் நடனம் ஆட கேட்டார்கள். நானும் அவருடைய ரசிகன் என்ற முறையில் என்னுடைய பங்கும் ஆல்பத்தில் இருக்க வேண்டும் என்று எண்ணினேன். ஆட ஒப்புக்கொண்டேன். தீபிகாவும் இதில் ஆடினால் நன்றாக இருக்கும் என்று எண்ணி அவரிடம் கேட்டேன். அவரும் ரஜினியின் பெரிய ரசிகை. உடனே ஒப்புக்கொண்டார். ஜாலியான பாடல், ரஜினி ஸ்டைலில் இருக்கும் என்றார்

வெள்ளி, 19 ஜூலை, 2013

இவர்கள் எப்படி பெண்ணைக் கையாள்கிறார்கள் பாருங்கள்


நெதர்லாந்தைச் சேர்ந்த ஒரு படகுக் குழு ( rowing team from Groningen, Netherlands ) “Why this Kolaveri Di?” என்ற தமிழ்ப்பட பாடலுக்கு அழகாக காட்சிப்படுத்தியுள்ளார்கள். இதில் இவர்கள் எப்படி பெண்ணைக் கையாள்கிறார்கள் என்று பாருங்கள்.
அதே சமயம் இந்தப்படத்தின் அதிகாரபூர்வமான பாடலில் பெண்கள் (வெளிநாட்டுப் பெண்களும் உண்டு) எப்படி கையாளப்படுகிறார்கள் என்றும் பாருங்கள்.
இப்படி ஆணையும் பெண்ணையும் பிரித்து வைத்து , புணருவதை நோக்கிய மிருகமாகவே ஆண்கள் தயார் செய்யப்படுகிறார்கள் நமது சமுதாயத்தில் என்பது என் எண்ணம். திருமணமே பெண்ணின் அருகாமைக்கான ஒரே வழி என்றே இன்னும் உள்ளது. காமம் வேறு , காதல் வேறு என்பது புரியவில்லை. சளிக்காமல் உடலுறவு கொண்டாலும் , அதைத்தாண்டி காதல் வேண்டும் என்னை மணந்துகொள் என்று சொல்லும் ஆண்களையும் காட்டும் படங்கள் உண்டு மேற்குலகில். ஆனால் பெண்ணிடம் உடல் சார்ந்த உறவே , ஆண் பெண் உறவின் உட்சம் என்பதுபோலத்தான் நம் சமுதாயம் உள்ளது.swim_saree
ஈவ் டீசிங் பாடல்களை எந்த புரிதலும் இல்லாமல் இன்றுவரை கேட்டுக்கொண்டுள்ளோம், ஆனால் சின்னச் சின்ன ஆண் பெண் அணைத்தலைக்கூட கொலைக்குற்றமாகப் பார்க்கிறோம். சேலை கட்டிக்கொண்டு வக்கிரமாக ஆடுவதை குடும்பத்துடன் இரசிக்கும் நாம், மேலை நாட்டுப் பெண்கள் பிகினியில் குளித்தால்கூட அவர்களின் கலாச்சாரத்தை
 கேலிசெய்கிறோம். மேற்குலகில் குற்றமே இல்லை என்று சொல்லவில்லை. ஆனால் உடல் விரட்டல் இப்படி இல்லை என்று என்னால் சொல்லமுடியும். பிகினியோடு ஒரு பெண் என்னருகில் வந்தால் அது இயல்பாய் இருக்கிறது. உடல் ஈர்ப்பு என்பது (வெறி) முதன்மை இல்லை.
முன் அறிமுகம் இல்லாத பெண்களுடன் எனது அனுபவம் (பல பதிவுகளில் நான் ஏற்கனவே சொல்லியுள்ளது)
நேரடியான பேச்சுக்கள் மனத்தடைகளைக் குறைக்கும். Life Guard இல்லாத நீச்சல் குளங்களில், பாதுகாப்பு காரணக்களுக்காக தனியாக‌ ஒருவர் மட்டும் இருக்க அனுமதியில்லை. மிகச்சாதரணமாக ,பிகினி உடையுடன் என்னிடம் வந்து “தனியாக நீச்சல் அடிக்கிறேன் , கொஞ்ச நேரம் எனக்காக இங்கேயே இருக்க முடியுமா” என்று ,என்றுமே பார்த்துப் பேசியிராத ஒரு அறிமுகம் இல்லாத, வெளிநாட்டுப்பெண் நேரிடையாக கேட்டதுண்டு.
டில்லியில் இருந்து ரிசிகேஷ்,ஹரித்துவார் போன்ற வரலாற்றுச் சிறப்பும் ,இயற்கையின் கொடையுமாக உள்ள இடங்களுக்கு பயணம் சென்றபோது , ஒரு இளம் தம்பதியினர் எனக்கு அறிமுகமானார்கள். அவர்கள் ஒருவயதில் குழந்தையுடன் வந்திருந்தார்கள். பஸ்பயண நேரமே பழக்கம்.
ஹரித்துவாரில் குளித்து முடித்தபின் பெரும்பாலும் கங்கைக் கரையிலேயே உடைமாற்றல் நடக்கும். ஆண்கள் நாங்கள் இருவரும் முதலில் குளித்துவிட்டோம். நான் மட்டும் அங்கேயே துண்டைக் கட்டி உடை மாற்றிவிட்டேன். நாங்கள் வந்தபின் குழந்தையை என்னிடம் கொடுத்துவிட்டு அந்தப் பெண்ணும் அவள் கணவனும் குளிக்கச் சென்றனர். ஆற்றின் அதிகவேகம் கருதி மனைவியின் பாதுகாப்புக்காக அந்தக் கணவன் இரண்டாவது முறைக் குளியல். இருவரும் குளித்து வந்தபின், அந்த கணவன் அங்கேயே துண்டைக் கட்டி உடை மாற்றிவிட்டார். அந்தப் பெண் இப்போது உடை மாற்றவேண்டும்.
அவர்கள் இருவரும் என்னையும் அழைத்து ஒரு சேலையை சுற்றிப்பிடிக்கச் சொன்னார்கள். நானும் , அவளது கணவரும் சேலையை வட்டமாகச் சுற்றிப்பிடித்து வெளிப்புறமாக நோக்கியிருந்தோம். குழந்தையை நடுவில் கிடத்திவிட்டு நாங்கள் பிடித்துக்கொண்ட ‘சேலை வட்ட மறைப்புக்குள்’ வேறு புதிய உடை மாற்றினாள் அந்தப் பெண். நான் அவர்களின் குடும்ப உறுப்பினர் கிடையாது. பஸ்நேரப் பழக்கம் மட்டுமே. இது இயல்பு மற்றும் நம்பிக்கை சார்ந்த நிலை. நல்ல மனங்கள் உண்டு என்பதைச் சொல்லவே இது. மனிதனாக இருத்தலை அங்கீகரிக்க இதைவிட ஒரு அந்நியப் பெண்ணிடம் என்ன வேண்டும்?
ஐந்தாம் வகுப்பிற்குப் பிறகு உடன் படித்த பெண்களின் கையைக்கூட தொட முடியாது. இப்படி விலக்கியே வளர்க்கப்பட்ட நம் சமுதாய ஆணையும்
 பெண்ணையும் சட்டென்று திருமணம் செய்து வைத்து, முதல் நாள் இரவிலேயே போய் புணருங்கள் என்று சொல்லி கதவடைத்தால் அதில் எங்கே காதல் வரும்.
காதல் என்றால் என்ன?
சின்ன வயதில் வரும் பாலியல் ஈர்ப்ப்பு என்பது வெறும் Crush. பலர் இந்த வெறும் Crush ஐ புனிதமாக கருதுவதுபோல ஒரு உருவாக்கம் தமிழகத்தில் உள்ளது. அதனாலதான் அழகான பெண்ணை தூரத்தில் இருந்து இரசிப்பதுடன் நிறுத்தாமல், ஒருதலைக்காதல் என்று சொல்லிக்கொண்டு திரிகிறார்கள். ஒருதலைக்காதல் என்ற ஒன்று இல்லை. அது ஆசை (Crush) மட்டும். இது ஒரு நோய்க்கூறு. அதாவது ஒருதலைக்காதல் என்பதே நோய். அப்படி ஒன்று இல்லை. அதற்குப் பெயர் ஆசை Crush . Love கிடையாது .
ஒரு பெண்ணைப் பார்த்தவுடன் வருவது ஆசை (Crush) , அதை எப்படி காதலாக (Love) மாற்றுவது… அதாவது அந்தப் பெண்ணை அணுகி (approach) எப்படி தன் விருப்பத்தை தெரிவித்து அந்தப்பெண் விரும்பும் பட்சத்தில் பழக ஆரம்பித்து, அதற்குப் பின்னால் திருமண விருப்பதைச் சொல்வது என்று கற்றுத்தரப்பட வேண்டும். இடையில் கருத்து வேறுபாடுகள் வந்தாலும் அழகாகப் பிரியவும் கற்றுக்கொள்ள வேண்டும். எனது உடன் வேலை பார்க்கும் பெண் விவகாரத்துப் பெற்றவர். இன்னும் அவர் கார் நடுவழியில் பழுதாகி நின்றால் அழைப்பது அதே விவகாரத்து செய்யப்பட்ட பழைய /முன்னாள் கண‌வனைத்தான்.
காதலைக் கற்றுக்கொடுப்போம்.
கணுக்கால் தெரிந்தவுடன் வருவது காதல் அல்ல. அது பெண்ணுடல் பார்த்தவுடன் வரும் காமம். அதில் தவறு இல்லை. ஆனால் பார்த்தவுடன் புணரவேண்டும் அதற்கு தமிழகத்தில் ஒரே வழி கல்யாணம் என்பதால், அதைக் காதலாகக் கருதி அலையக்கூடாது. No Strings Attached (2011) என்ற படத்தில் நண்பர்களாக இருப்பவர்கள் , காமம் தாண்டி தவிப்பது, காதலுக்காக. திகட்ட திகட்ட உடலுறவு கிடைத்தாலும் அதையும் தாண்டி காதலிக்கப்பட வேண்டும் , காதலிக்க வேண்டும் என்பது தேவை என்று கதை சொல்லப்பட்டு இருக்கும். காமம் என்பது காதலைத்தூண்ட ஒரு வாசனைத் திரவியம் மேஜிக். ஆனால் காதல் என்பது புரிந்துகொள்ளல் அன்பு செலுத்துதல் ப்ரியமாய் இருத்தல் துணையாய் இருத்தல். அது உள்ளதா?
Valentine’s Day
மேலைநாடுகளில் காதலர் தினத்தில் யாருக்கு வேண்டுமானாலும் Happy Valentine’s Day என்று வாழ்த்துகள் சொல்லலாம் . அப்பா, அம்மா, தம்பி, தங்கை, அண்ணன், ஆசிரியர், அக்கம் பக்கம் என்று யாரும் யாருக்கு வேண்டுமானலும் வாழ்த்துகள் சொல்லலாம். அதாவது காமம் கடந்த ஒரு வழக்கமாக மாறிவிட்டது. இருந்தாலும், காமம் கலந்த காதலில் (கணவன்-மனைவி) இது புது அர்த்தம் பெறுகிறது. தமிழில் காதல் என்பது காமம் கலந்த ஒன்றைத்தவிர மற்றதற்கு பயன்படுத்த முடியாது. எனது தோழர்களிடம் உங்களைக் காதலிக்கிறேன் என்று சொன்னால் தவறாகிவிடும். சரி உங்களுடன் அன்பாகியிருக்கிறேன் என்று சொன்னாலும் ஏதோ சப்பென்று உள்ளது. என்ன சொல்லலாம்…
தமிழ் இணையைப் பயனாளர்கள் அனைவருக்கும் எனது அன்பும் ப்ரியங்களும்,{காணொளி,}

                  
                     
                 

வியாழன், 11 ஜூலை, 2013

பெண் இனத்திற்கு என்னால் ஆன உதவி


 
மாலினி 22 பாளையங்கோட்டை என்ற திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நேற்று(09.08.13) நடந்தது. 19 வருடங்களுக்குப் பிறகு நடிகை ஸ்ரீபிரியா திரையுலகிற்கு இயக்குனராக இத்திரைப்படத்தின் மூலம் ரிஎன்ட்ரி கொடுக்கிறார். ஸ்ரீப்ரியா இயக்கும் இத்திரைப்படத்தை, ஸ்ரீப்ரியாவின் கணவர் ராஜ்குமார் தயாரிக்கிறார். நடிகையாக 300 படங்களுக்கு மேல் நடித்திருக்கும் ஸ்ரீப்ரியா திடீரென இயக்குனரானதற்கு காரணம் பெண் இனத்திற்கு தன்னால் ஆன சிறு உதவியை செய்வதற்காகத்தானாம். பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய போது ஸ்ரீப்ரியா “ நாம் பத்திரிக்கையை படிக்கும் போது ஒரே மாதிரியாக பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் தினம் தினம் நடப்பதை பார்த்துக்கொண்டிருக்கிறோம். அதைப் படிக்கும் போது வருவது சிறிய கோபமல்ல, பெரிய கோபம். ஆனால் நம்மால் என்ன செய்ய முடிந்தது. பெண் இனத்திற்காக ஏதாவது செய்யவேண்டும் என்பதற்காகத் தான் இந்த முயற்சி. தமிழ்நாட்டிலும், ஆந்திராவிலும் தான் இந்த கொடுமை அதிகமாக நடந்துவருவதால் தமிழிலும், தெலுங்கிலும் இந்த திரைப்படத்தை எடுக்கிறோம்” என்று கூறினார். மாலினி 22 பாளையங்கோட்டை திரைப்படம் ஒரு மலையாள திரைப்படத்தின் ரீமேக்காம். ஆனால் பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது, அந்த மலையாளத் திரைப்படத்தின் பெயரை ஸ்ரீப்ரியா சொல்ல மறுத்துவிட்டார். மலையாளத் திரைப்படத்திலிருந்து தமிழ் ரீமேக் பலவிதங்களில் மாறுபட்டு இருப்பதால் இரண்டு படங்களையும் ஒப்பீடு செய்யவேண்டாம் எனவும் கூறினார். மேலும் பெண் இனத்திற்காக போராடுவது மட்டுமல்லாமல், சமீபத்தில் ஏற்பட்ட உத்திரகாண்ட் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்காளுக்காக 23 லட்ச ரூபாய் நிதி வழங்கியிருக்கிறது ஸ்ரீப்ரியா குடும்பம்

செவ்வாய், 9 ஜூலை, 2013

நடிகமணி’வி.வி. வைரமுத்து அவர்களின் அரிச்சந்திர

 
நடிகமணி’ வி.வி.வைரமுத்து அவர்களி  அரி சந்திர மையான காண்டம் .
ஈழத்தமிழர் கலைப் பொக்கீசங்கள் நடிகைமணி வி.வி.வைரமுத்து அவர்கள் ஒரு நாட்டுக் கூத்தக் கலைஞனாக வலம் வந்தவர் மட்டுமல்ல எங்கள் ஈழத்துக்கே பெருமை தேடித்தந்தவர் அவர் பல புரான நாட்டுக் கூத்து நடித்திருந்தார் அவற்றில் மயாண காண்டம்,பத்த நந்தனார்,என பல கூத்து நாடகங்கள் இவருக்கு பெருமை சேர்த்தவை
 மட்டுமல்ல யாழ்வாழ் தமிழருக்கு பெருமை சேர்த்தவை எனலாம், முன் குறிப்பிட்ட இரண்டு நாடகங்களும் எம்.கே. வாசகர் அவர்களால் நவீன உத்தியோடு கொழும்பிலும் மேடையேறியதுகூடச் சிப்பாகும் அந்தக்காட்சியை இங்கே தருவதன் மூலம் நாங்கள் மிகுந்த மகிழ்வு கொள்கிறோம் ஏன் எனில் எங்கள் வரறாறு சொல்லும் கலைஞர்கள் பதிவு உங்கள் பார்வைக்கு வளம் சேர்க்கும் இன்றைய தலைமுறையினர் கூட ஒருமுறை பார்கவும் பார்த்தவர்களுக்கும் அரியவாய்ப்பு மிக்கநன்றி ** {காணொளி} 

சனி, 6 ஜூலை, 2013

பாடல் அழகி ஆண்ட்ரியாவின் பேய் பாட்டு


திரு திரு துறு துறு படத்தின் இயக்குனர் நந்தினி இயக்கும் புதிய படம் கொலை நோக்கு பார்வை.
இப்படத்தில் மிர்ச்சி சுசியின் கணவர் கார்த்திக் குமார், கன்னட பட நாயகி ராதிகா ஆப்தே இணைந்து நடித்துள்ளார்.
இசையமைப்பாளர் அஸ்வத்தின் இசையில், மதன் கார்க்கி பாடல்களை எழுதியுள்ளார்.
இப்படத்தில் பேய் பாடல் ஒன்றை பாடியுள்ளாராம் ஆண்ட்ரியா.
இப்பாடல் நன்றாக வரவேண்டும் என்பதற்காக அதிகமாகவே மெனக்கெட்டுள்ளாராம்.
படத்தின் சூழலுக்கு ஏற்றவாறு பாடல் அமைந்துள்ளது, நாங்கள் எதிர்பார்த்ததை விட சிறப்பாக வந்துள்ளது என்று தெரிவித்துள்ளார் படத்தின் இயக்குனர் நந்தினி.
 

டென்னிஸ் ரசிகையான காஜல் அகர்வால்


தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம்வந்து கொண்டிருக்கும் காஜல் அகர்வாலுக்கு டென்னிஸ் விளையாட்டு என்றால் கொள்ளை பிரியமாம்.
அதுமட்டுமல்லாமல் நன்றாக டென்னிஸ் ஆடவும் தெரியுமாம்.
ஆனால் தற்போது படப்பிடிப்புகளில் பிசியாக இருப்பதால், டென்னிஸ் ஆட முடியாமல் போனது.
இதற்கிடையே சமீபத்தில் பிரேக் கிடைத்ததால், விம்பிள்டன் டென்னிஸ் போட்டியை பார்க்க லண்டனுக்கு கிளம்பி விட்டார் காஜல்.
ஏற்கனவே அங்கு சென்றிருந்த தங்கை நிஷா அகர்வாலுடன் போட்டிகளை பார்த்து ரசித்தாராம்.
மேலும் அங்குள்ள சுற்றுலா தளங்களுக்கும் சென்று விட்டு, புதிய உற்சாகத்துடன் படப்பிடிப்புகளில் பங்கேற்று வருகிறார்.
இதுதவிர முன்னணி நாயகர்களின் படங்களை தவிர்த்து வரும் காஜல், சம்பள விடயத்திலும் படு கறாராக இருக்கிறார்

கொலிவுட்டுக்கு மீண்டும் வரத்துடிக்கும் அசின்


கொலிவுட்டில் மீண்டும் கால்பதிக்கலாம் என்ற எண்ணத்தில் அசின் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கொலிவுட்டில் முன்னணி நடிகையாக இருந்த போது பாலிவுட்டில் சாதிக்க வேண்டும் என மும்பைக்கு போனார் அசின்.
ஆனால் அவருக்கு பாலிவுட்டில் சரியாக வாய்ப்புகள் அமையவில்லை.
இந்நிலையில் கௌதம் மேனன் தனது துருவநட்சத்திரம் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக அசின் அல்லது சோனம் கபூரை தெரிவு செய்யலாம் என திட்டமிட்டுள்ளாராம்.
அவ்வாறு துருவநட்சத்திரம் படத்திற்கு அசினை தெரிவு செய்தால் அவருக்கு இது பெரிய உதவியாக இருக்குமாம்.
தன்னை துருவநட்சத்திரம் படத்தின் கதாநாயகியாக தெரிவு செய்தால் மீண்டும் கொலிவுட்டில் கால்பதித்த விடலாம் என்ற எண்ணத்தில் அசின் இருப்பதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன