வெள்ளி, 17 மே, 2013

சந்தானத்திடம் நொந்து நூடுல்ஸ் ஆன ஹன்சிகா


ஆர்யா- சந்தானம் இணைந்து நடித்தால், அப்படத்தில் நடிக்கும் நாயகிகளை கலாய்ந்து ஒரு வழியாக்கி விடுவார்களாம்.
சமீபத்தில் இவர்கள் கூட்டணியில் ஹன்சிகா- அஞ்சலியும் இணைந்து நடித்து வெளிவந்த படம் சேட்டை.
சேட்டை படத்தில் நடித்த போது நொந்து நூடூல்ஸ் ஆனவர் தான் ஹன்சிகா.
ஆனால் ஆர்யாவுடன் சேர்ந்து, ஹன்சிகாவை கலாய்த்த சந்தானம், தீயா வேலை செய்யணும் குமாரு படத்திற்காக சித்தார்த் - ஹன்சிகாவுடன் இணைந்து நடித்த போது, அவரை எந்நேரமும் புகழ்ந்து பேசிக் கொண்டிருந்தாராம்.
மேலும் ஸ்பாட்டில் அனைவரும் ஹன்சிகாவை சின்ன குஷ்பூ என்று சொல்ல, சந்தானமோ, என் பார்வைக்கு அவர் ஏஞ்சலினா ஜோலி போல் காட்சி தருகிறார் என்று புகழ்ந்தாராம்.

சந்தோஷத்தில் தமன்னா

முதலிடம் என்பது நிலையானதல்ல, ஆனாலும் ரசிகர்களின் அன்பில் மகிழ்கிறேன் என்று தெரிவித்துள்ளார் தமன்னா.
2012-ல் மக்களை அதிகம் கவர்ந்த பெண்கள் பற்றிய கருத்துக்கணிப்பில் தமன்னாவுக்கு முதலிடம் கிடைத்துள்ளது.
இதுகுறித்து தமன்னா கூறுகையில், என் தோற்றம் என்பது இல்லாமல் சினிமாவில் எப்படி நடிக்கிறேன் என்பதை வைத்து முதலிடத்துக்கு என்னை தெரிவு செய்துள்ளனர்.
குடும்ப பாங்காகவும், ஜாலியான கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறேன்.
ஆண்கள் மட்டுமின்றி பெண் ரசிகைகளும் எனக்கு நிறைய இருக்கிறார்கள்.
நடிகர்களில் எனக்கு ஹிருத்திக் ரோஷனை பிடிக்கும். நான் அவருடைய ரசிகை.
சூர்யா, விஜய், ஜெயம் ரவி போன்றோர் பிரமாதமாக நடிக்கின்றனர். அவர்களையும் எனக்கு பிடிக்கும்.
ரசிகர்கள் எனது கட்அவுட்களுக்கு பூஜை, பால்அபிஷேகம் செய்கின்றனர். இது மகிழ்ச்சி அளிக்கிறது.
ஆனாலும் இந்த மரியாதைகள் நிரந்தரம் அல்ல என்று எனக்கு தெரியும். இது வரும் போகும்.
பட உலகம் போட்டி நிறைந்ததாக உள்ளது. இன்று நான் இருக்கிறேன், நாளை வேறொருத்தர் வருவார்.
நம்பர் ஒன் இடம் என்பது நிரந்தரமானது அல்ல, ரசிகர்களின் அன்பே முக்கியம் என்கிறார் தமன்னா.

சூர்யாவுடன் ஜோடி சேரும் சமந்தா


கொலிவுட்டில் சூர்யா நடிக்கும் சிங்கம் 2 படப்பிடிப்பு முடிந்த நிலையில், தற்போது ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிப்பதற்கு தீர்மானித்திருக்கிறார்.
தனது முதல் படத்தினை ஆரம்பித்திருக்கிறார் சூர்யா. இரண்டாவது படத்தின் படப்பிடிப்பு ஒகஸ்ட் மாதம் தொடங்குகிறதாம்.
கௌதம் வாசுதேவ மேனன், லிங்குசாமி இருவரின் படங்களில் யாருடைய படம் முதலில் என்ற சர்ச்சை, குழப்பங்களுக்கு முற்றுப் புள்ளி வைக்கும் விதமாக இரண்டு படங்களிலும் ஒரே நேரத்தில் நடிப்பது என முடிவு செய்துள்ளார்.
கௌதம் இயக்கத்தில் நடிக்கும் துருவநட்சத்திரத்தின் படப்பிடிப்பு தொடங்கிவிட்டது. படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.
இதனையடுத்து சூர்யா லிங்குசாமி படத்தில் நடிக்க இருக்கிறார். படப்பிடிப்பு ஒகஸ்டு மாதம் தொடங்குகிறது.
இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக சமந்தா நடிக்கிறார். இந்த தகவலை சமந்தா உறுதிபடுத்தியுள்ளார்.
லிங்குசாமி-சூர்யா கூட்டணியில் உருவாகும் படத்திற்கு யுவன்சங்கர்ராஜா இசையமைக்கிறார். இப்படம் குறித்த மற்ற விபரங்கள் முறைப்படி விரைவில் அறிவிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மீண்டும் பாடகரான வடிவேலு


மீண்டும் பாடகரான வடிவேலு நீண்ட இடைவேளைக்குப் பின்பு தெனாலிராமன் படத்தில் நடிக்கும் வடிவேலு, அப்படத்திற்கு பாடல் ஒன்றை பாடியிருக்கிறார். கடந்த இரண்டு வருடமாக சினிமா வாய்ப்பு இன்றி தவித்த வடிவேலு, புலிகேசி இரண்டாம் பாகத்தில் நடிக்கிறார், தெனாலிராமன் கதையில் நடிக்கிறார், கே.எஸ்.ரவிக்குமார் இயக்கும் படத்தில் நடிக்கிறார் என பல தகவல்கள் வெளியாகின. ஆனால் வடிவேலுவை வைத்து படம் தயாரிக்க தயாரிப்பாளர் யாரும் முன்வரவில்லை. இதற்கிடையே இம்சை அரசன் புலிகேசி பாகம் 2-ல் வடிவேலு நடிக்க இருந்த நிலையில், கதையில் சில மாற்றங்கள் செய்ய கூறியுள்ளார். ஆனால் அதற்கு இயக்குனர் சிம்புதேவன் உடன்படவில்லை. அதனால் அப்படத்திலிருந்து விலகினார் சிம்புதேவன். இந்நிலையில் வடிவேலு போட்டா போட்டி படத்தை இயக்கிய யுவராஜ் இயக்கும் கஜ புஜ கஜ தெனாலிராமனும் கிருஷ்ணதேவராயரும் என்ற படத்தில் நடித்து வருகிறார். இதில் வடிவேலு தெனாலிராமன், கிருஷ்ணதேவராயர் என இரட்டைக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இமான் இசையமைக்கும் இப்படத்தை ஏ.ஜி.எஸ்., நிறுவனம் தயாரிக்கிறது. படத்தில் வடிவேலு நீண்ட இடைவெளிக்குப் பின்பு இமான் இசையில் பாடல் ஒன்றையும் பாடியிருக்கிறார். இந்த தகவலை இசையமைப்பாளர் இமான் தெரிவித்துள்ளார். இதுவரை 31 பாடல்கள் பாடிய வடிவேலு, கடைசியாக 12 வருடத்திற்கு முன்பு என் புருஷன் குழந்தை மாதிரி படத்தில் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

புதன், 15 மே, 2013

கனா காணும் காலங்கள்

கல்லூரி சாலை!பிரபலம் சார்ந்த & பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள்,05/14/13,{காணொளி}

ஞாயிறு, 12 மே, 2013

நயன்தாரா-ஆர்யா இன்று 11 மணிக்கு திடீர் திருமணம்


சிம்பு, பிரபுதேவா ஆகிய இரண்டு பேர்களுடனான காதல் பிரிவுக்குப் பிறகு நயன்தாராவின் புதிய காதலர் ஆர்யா தான் என்று கோடம்பாக்கம் முழுக்க கிசுகிசுக்கள் பரவிக்கிடக்கின்றன.
நேற்று அந்த செய்தியை உண்மையாக்கும் வகையில், ஆர்யா வெட்ஸ் நயன்தாரா. திகதி மே 11, நேரம்- இரவு 9 மணி என்று அச்சிடப்பட்ட இ-மெயில் ஒன்று நமக்கு வந்தது.
அட இதென்ன அப்படியானால் ஆர்யா- நயன்தாரா காதல் உண்மை தானா? என்று நாம் யோசித்துக் கொண்டிருக்கையில் அது இருவரும் சேர்ந்து நடித்து வரும் ‘ராஜாராணி’ படத்துக்காகத்தான் பப்ளிசிட்டி ஸ்டண்ட் என்ற சீக்ரெட் தகவல் தெரியவந்தது.
மேலும் அதில்... கிட்டத்தட்ட இரண்டு நிஜமாகவே காதலித்து வருகிறார்கள் என்பதைப் போலவே..
“இந்த செய்தி பல நாட்களாக காற்றில் மிதந்து வரும் செய்திதான் ....
இதை பற்றி அறியாதவரோ தெரியாதவரோ யாரும் இல்லை ...
இது ஆச்சரியமூட்டினாலும் அதிர்ச்சி தரும் தகவல் இல்லை ...
நெஞ்சை அள்ளிய அரசியை, அரசன் தன்னிலை மறக்க செய்யும் தருணம்.
இது அரங்கேறும் நாள் நாளை...”
என்றும் கூடுதலான வாசகங்கள் இடம்பெற்றிருந்தன.
ஒரு காலத்தில் மற்றவர்களுடன் தங்களை இணைத்து கிசுகிசுக்கள் வந்தாலே மார்க்கெட் சரிந்து விடுமோ என்று பயந்து போகும் நடிகர்-நடிகைகள் மத்தியில் தற்போது அதைப்பற்றிய எந்த விதமான பயமும் இல்லாமல் உற்சாகமாக எடுத்துக் கொள்கிறார்கள் நடிகர் நடிகைகள்.
படத்துக்கான இந்த வித்தியாசமான பப்ளிசிட்டி ஸ்டண்ட்டை ஆர்யா-நயன்தாரா இருவரின் அனுமதியுடனேயே செய்திருக்கிறார் படக்குழுவினர்கள்

புதன், 8 மே, 2013

காதலனை பிரிந்தாலும் சோகம் ஏதுமில்லை:


ரன்பீர் கபூருடன் காதல் முறிந்தாலும் இருவரும் வாழ்க்கை முழுவதும் நண்பர்களாக இருப்போம் என்கிறார் தீபிகா படுகோன்.
காதல் ஜோடிகள் தங்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டால் உடனே பிரிந்து வேறு காதலை தேடிக்கொள்வது பேஷனாகி வருகிறது.
சினிமாவுலகில் பிரேக் அப் என்பது சகஜமாகிவிட்டது. அந்த பட்டியலில் தற்போது இணைந்துள்ளனர் ரன்பீர் கபூர்- தீபிகா படுகோன்.
இதுபற்றி தீபிகா படுகோன் கூறுகையில், பாலிவுட் நாயகன் ரன்பீர் கபூரும் நானும் காதலித்தோம். இப்போது பிரேக் அப் ஆகிவிட்டது. நண்பர்களாக மாறி இருக்கிறோம்.
இந்த நட்பு வாழ்நாள் முழுவதும் தொடரும். மனதளவில் பிரேக் அப் ஆனாலும் படங்களில் சேர்ந்து நடிக்கிறோம்.
இருவரும் நன்கு பழகியவர்கள் என்பதால் இருவரும் சேர்ந்து நடித்த யே ஜவானி ஹை தீவானி ஷூட்டிங்கில் நன்கு பொழுதுபோனது.
ஷூட்டிங்கில் நாங்கள் நாங்களாக இருந்ததைவிட அந்தந்த கதாபாத்திரங்களாகவே வாழ்ந்தோம். கதாபாத்திரத்தை ஏற்கும்போது எனது நிஜ வாழ்க்கையை மறந்துவிடுவேன் என்று தெரிவித்துள்ளார்.
 

விராட் கோஹ்லி போல மாப்பிள்ளை வேண்டும்:


இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் விராத் கோஹ்லி போல் மாப்பிள்ளை வேண்டும் என்கிறார் அஞ்சலி.
சித்தி பாரதிதேவியும், இயக்குனர் களஞ்சியமும் தன்னை கொடுமைபடுத்தியதாக வீட்டிலிருந்து வெளியேறி 5 நாள் தேடுதலுக்கு பிறகு பொலிஸ் முன் ஆஜரானார் நடிகை அஞ்சலி.
இவர் தெலுங்கு நடிகர் ஒருவரை காதலிப்பதாக தகவல் வெளியானது. ஆனால் அதுபற்றி அஞ்சலி உறுதி செய்யவில்லை.
தெலுங்கு படத்தில் நடித்து வரும் அஞ்சலியிடம், உங்களுக்கு வரும் மாப்பிள்ளை எப்படி இருக்க வேண்டும்? என்ற கேள்விக்கு, சுறுசுறுப்பாகவும், அழகாகவும் தோன்றும் கிரிக்கெட் வீரர் விராத் கோஹ்லிபோல் எனது வருங்கால கணவர் இருக்க வேண்டும்.
மழுமழுவென தாடியை ஷேவ் செய்திருப்பதைவிட டிரிம் செய்யப்பட்ட தாடியோடு உள்ளவரைத்தான் பிடிக்கும்.
அதைவிட முக்கியம் எனக்கு வாழ்க்கை துணையாக வருபவர் தன்னம்பிக்கை உடையவராகவும், தனது உறுதியில் மாற்றம் இல்லாதவரும் கடினமான தருணங்களிலும் என்னை கைவிடாமல் பாதுகாப்பவராக இருக்க வேண்டும்.
என்னுடைய தேவைகளை பூர்த்தி செய்யும் மாப்பிள்ளையாக இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
 

வில்லியாக நடிக்கிறார் துளசி


 1980களில் கொலிவுட்டை கலக்கிய ராதாவின் இளைய மகள் துளசி, வில்லி கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
முதல் படமான கடல் நன்றாக ஓடவில்லை என்பதால் துளசி கவலை அடைந்துள்ளார்.
தற்போது அதிலிருந்து மீண்டு தன் அடுத்த படத்தில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார்.
ஜீவா ஜோடியாக யான் படத்தில் நடிக்கும் துளசிக்கு இதில் செமத்தியான கதாபாத்திரமாம்.
வில்லத்தனம் கலந்த நாயகி கதாபாத்திரம் என கொலிவுட்டில் பேச்சு அடிபடுகிறதாம்.
கிளாமர், டூயட் என சராசரியான நாயகிகளை போல் இல்லாமல், இரண்டாவது படத்திலேயே மாறுபட்ட நடிப்புத் திறமையை வெளிப்படுத்தும் வித்தியாசமான  கதாபாத்திரம் கிடைத்திருப்பதால் உற்சாகமாக இருக்கிறார் துளசி.
இந்த படம் ஹிட்டாகும் என நம்பிக்கையுடன் இருக்கும் துளசி, இதற்கு அடுத்தபடியாக தொடர்ந்து நல்ல வாய்ப்புகள் கிடைக்கும் என்றும நம்புகிறாராம்
 

திங்கள், 6 மே, 2013

நண்பர்களே தயவு செய்து இதனை,,,,

திறமை இருந்தா எதுவும் செய்யலாம் என்று சொல்லுவார்கள் உண்மையாகவே இந்த பெண் நடனத்தால் எங்களை மெய்சிலிர்க்க வைத்து விட்டார்...