வெள்ளி, 5 ஏப்ரல், 2013

நடிகை ஸ்ரீ தேவிக்கு பத்மஸ்ரீ விருது

பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியவர்களுக்கான பத்ம விருதுகள் இன்று டில்லியில் உள்ள ராஷ்டிரபதிபவனில் வழங்கப்பட்டது.
நாட்டின் மிக உயரிய விருதுகளான பத்ம விருதுகளை இன்று ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வழங்கினார்.
முன்பே கூறியதுபோல் விழாவைப் புறக்கணித்தார் பாடகி ஜானகி. பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு மத்திய அரசு பத்மவிபூஷன், பத்மபூஷன், பத்மஸ்ரீ விருதுகள் வழங்கி வருகிறது.
2013-ம் ஆண்டுக்கான விருது பெறுவோர் பட்டியலை மத்திய அரசு கடந்த ஜனவரி மாதம் வெளியிட்டது. இதன் படி நடிகை ஸ்ரீ தேவிக்கு பத்மஸ்ரீ விருதும், நடிகை சர்மிளா தாகூருக்கு பத்மபூஷன் விருதும் வழங்கப்பட்டது.
பத்ம விருதுகள் வழங்கப்படுவதில் தென் இந்தியர்கள் புறக்கணிக்கப்படுவதாகக் கூறி, தனக்கு வழங்கப்பட்ட பத்ம விபூஷன் விருதை பிரபல பின்னணி பாடகி எஸ். ஜானகி புறக்கணித்துள்ளார்.
 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக