வியாழன், 11 ஏப்ரல், 2013

நீச்சல் தெரியாமல் ஆழ்கடலில் மீன்பிடித்த தனுஷ்


கொலிவுட்டில் பரத்பாலா இயக்கத்தில் விரைவில் வெளியாகவுள்ள மரியான் படத்தில் மீனவனாக நடிகர் தனுஷ் நடித்துள்ளார்.
சாதாரண மீனவன் போல் இல்லாமல் 50 அடி ஆழ்கடலுக்குள் சென்று மீன் பிடித்து வரும் அதிரடியான கதாபாத்திரம் மரியான் படத்தில் தனுஷிற்கு கொடுக்கப்பட்டுள்ளது.
ஆனால் நிஜத்தில் நாயகன் தனுஷிற்கு நீச்சல் தெரியாது என்று தகவல் வெளியாகியுள்ளது.
அதனால் தண்ணீருக்குள் மூச்சு பிடித்து நடிக்க முடியாது என்பதால் தனுஷிற்கு பயிற்சி கொடுக்க வெளிநாட்டில் இருந்து ஒரு சிறப்பு பயிற்சியாளரை வரவைத்துள்ளனர்.
அவர் கொடுத்த பயிற்சிக்கு பின்பு தான், 50 அடி ஆழ்கடலில் ஆக்சிஜன் கூட இல்லாமல் உப்புத் தண்ணீரில், கண்ணாடி அணியாமல் தத்ரூபமாக நடித்தாராம் தனுஷ்.
இதனால் முதலில், கடலை பார்த்தவுடனேயே கலக்கம் அடைந்த தனுஷ், பயிற்சிக்கு பின் தைரியமாக கடலில் இறங்கி படக் குழுவினரை ஆச்சர்யப்பட வைத்தாராம்.
 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக