அஞ்சலிக்கு அனுப்பப்பட்ட பிடிவாரண்டை ரத்து செய்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
தமிழில் கற்றது தமிழ் படத்தின் மூலம் அறிமுகமானவர் அஞ்சலி.
இவர், தனது சித்தி பாரதிதேவியும், இயக்குனர் களஞ்சியமும் தன்னை கொடுமைப்படுத்தி சொத்துகளை அபகரிக்க முயல்வதாக புகார் தெரிவித்து இருந்தார்.
இந்த புகார் தன் மீது கூறப்பட்ட அவதூறு என்றும், பொய்யான புகாரை கூறிய நடிகை அஞ்சலி மீது கிரிமினல் வழக்கு தொடர்ந்து தண்டிக்க வேண்டும் எனவும் கூறி இயக்குனர் களஞ்சியம் தரப்பில் அவரது சட்டத்தரணி ஜெயப்பிரகாஷ் மற்றும் சுரேஷ்பாபு ஆகியோர் சைதாப்பேட்டை பெருநகர 17-வது நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
வழக்கு விசாரணையின் போது நடிகை அஞ்சலி நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்து வந்தார்.
கடந்த 12ம் திகதி வழக்கு விசாரணைக்கு வந்தபோது நடிகை அஞ்சலிக்கு வாரண்டு பிறப்பித்து மாஜிஸ்திரேட்டு ராஜலட்சுமி உத்தரவிட்டார்.
இதற்கிடையில் நடிகை அஞ்சலி தரப்பு சட்டத்தரணி முகுந்தன், சைதாப்பேட்டை 17வது நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார்.
அதில், நடிகை அஞ்சலி சினிமா படப்பிடிப்பில் இருப்பதால் அவர் மீதான வாரண்டை ரத்து செய்ய வேண்டும் என கோரினார்.
இந்த மனுவை ஏற்றுக்கொண்ட மாஜிஸ்திரேட்டு ராஜலட்சுமி நடிகை அஞ்சலி மீதான வாரண்டை ரத்து செய்து உத்தரவிட்டார். நடிகை அஞ்சலி மீதான வழக்கு விசாரணை வருகிற 3ம் திகதி வருகிறது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக