சனி, 22 ஜூன், 2013

பணியாற்றிய நாயகர்கள் பற்றி மனம் திறந்துள்ளார் ஹன்சிகா.



இன்றைய திகதியில் கொலிவுட்டின் நம்பர் ஒன் நடிகையாக வலம் வந்து கொண்டிருக் கிறார் ஹன்சிகா.
சமீபத்தில் வெளியான தீயா வேலை செய்யணும் குமாரு படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டி ருக்கிறது.
அடுத்து சூர்யாவுடன் இணைந்துள்ள சிங்கம்2 படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.
இந்நிலையில் தன்னுடன் பணியாற்றிய நாயகர்கள் பற்றி மனம் திறந்துள்ளார்.
தன்னுடைய வேலாயுதம் பட நாயகன் விஜய் சின்சியர் என்றும், சூர்யாவை சிங்கம் என்றும், எங்கேயும் காதல் நாயகன் ஜெயம் ரவி நாட்டி(குறும்புத்தனம்) என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் சிம்பு எப்படிப்பட்டவர் என்ற கேள்விக்கு வாலு என்றும், சேட்டை நாயகன் ஆர்யா வேடிக்கையானவர் என்றும் பதில் அளித்துள்ளார்.
தன்னுடன் பெரும்பாலான படங்களில் நடித்து வரும் சந்தானத்தை பார்த்தாலே, அவருக்கு சிரிப்பு தான் வருமாம்.

ஸ்ரீதேவியுடன் பிரபுதேவா டான்ஸ்


மும்பை : இந்திய சர்வதேச திரைப்பட அகாடமி (இஃபா) விருது விழாவில் ஸ்ரீதேவியுடன் பிரபுதேவா நடனம் ஆடுகிறார். வருடந்தோறும் வெளிநாடுகளில் வழங்கப்படும் இஃபா விருது விழா இந்தாண்டு மக்காவுவில் அடுத்த மாதம் 4,ம் தேதி நடக்கிறது. இதில் இந்தி நடிகைகள் பலர் நடனமாடுகின்றனர். இதன் சிறப்பாக ஸ்ரீதேவியுடன் பிரபுதேவாவும் நடனம் ஆடுகிறார். நிகழ்ச்சியில் ஸ்ரீதேவி நடித்த படங்களில் இருந்து பாடல்கள் இடம்பெறும். அதற்கான ஒத்திகையில் இருவரும் ஈடுபட இருப்பதாக கூறப்படுகிறது.

செவ்வாய், 18 ஜூன், 2013

சூர்யா, காஜல் அகர்வாலுக்கு விருது(


 
தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் சிறந்த நடிகர், நடிகைகளுக்கு விருது வழங்கும் விழா ஐதராபாத்தில் நடந்தது.
இதில் தமிழில் சிறந்த நடிகராக சூர்யா தெரிவு செய்யப்பட்டார். மாற்றான் படத்தில் ஒட்டிப் பிறந்த இரட்டையர் கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருந்ததாக அவரை தெரிவு செய்தனர்.
சிறந்த நடிகையாக காஜல் அகர்வால் தெரிவு செய்யப்பட்டார். இவர் துப்பாக்கி படத்தில் சிறப்பாக நடித்ததற்காக தெரிவு செய்தனர்.
இதுபோல் தெலுங்கில் சிறந்த நடிகராக பவன் கல்யாண், சிறந்த நடிகையாக சமந்தாவும், சிறந்த வில்லன் நடிகராக சுதீப்பும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா விருதுகளை வழங்க, சூர்யாவும், காஜல் அகர்வாலும் மேடையில் ஏறி பெற்றுக் கொண்டனர்.
நாகர்ஜூனா, நித்யாமேனன் போன்றோரும் சிறந்த நடிகர், நடிகை விருதை பெற்றனர். விழாவையொட்டி நடிகர், நடிகைகள் நடனம் உட்பட்ட கலை நிகழ்ச்சிகள் நடந்தன,

                          

ஹன்சிகாவால் ஆடிப் போன சமந்தா


ரசிகர்கள் மட்டுமின்றி, நாயகர்களாலும் அதிகம் விரும்பப்படும் பட்டியலில் இடம் பிடித்துள்ளார் ஹன்சிகா.
நாயகி என்ற பந்தாவும், ஏனோ தானோ என்றும் இல்லாமல் தனது முழுதிறமையையும் வெளிப்படுத்தி நடிப்பதால் இயக்குனர்களாலும் அதிகம் விரும்பப்படும் நாயகியாகி விட்டார்.
இது குறித்து அவர் கூறுகையில், எந்த காட்சியாக இருந்தாலும் நான் முழு திருப்தி அடையும் வரை நடிப்பேன்.
அதற்காக ஓவர் ஆக்டிங் செய்ய மாட்டேன்.
தீயா வேலை செய்யணும் குமாரு படத்தில் சித்தார்த்துக்கு ஜோடியாக நடித்துள்ளேன்.
சித்தார்த் எனக்கு ரொம்பவும் மேட்ச்சான ஜோடி. படத்தில் எங்களுக்கு இடையேயான கெமிஸ்ட்ரி நன்றாக வந்திருக்கிறது என கூறியுள்ளார்.
இதுமட்டுமல்லாமல் சீனை சொன்னதும் கமெரா முன்பு வந்து நிற்பவர், எந்தவித தயக்கமும் இல்லாமல் எள் என்றால் எண்ணெய்யாக நடிப்பை பொறிந்து தள்ளி வருகிறார் என்று இயக்குனர் சுந்தர்.சி புகழாரம் சூட்டியுள்ளார்.
ஏற்கனவே சித்தார்த்தும், சமந்தாவும் காதல் வானில் சிறகடித்து பறப்பதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், ஹன்சிகாவின் இந்த அறிவிப்பு, சமந்தாவுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
 

திங்கள், 3 ஜூன், 2013

தெய்வம் தந்த என் தங்கை!


மாயாவை விட்டு விஸ்வா பிரிந்து செல்கிறான்! விஸ்வா மாயாவிடம் தனிக்குடித்தனம் பற்றி பேசுகிறான். இதனால் விஸ்வா மாயாவின் எண்ணத்தை புரிந்து கொண்டு அவளை பிரிந்து செல்கிறான். மாயா ஷாலினியிடம் மாலதியை பற்றி தவறான எண்ணத்தை ஏற்படுத்துகிறாள்.

ஞாயிறு, 2 ஜூன், 2013

நலனுக்காக தீக்குளித்த முத்துக்குமாரை ,.,


    உயிர்நீத்தவர் முத்துக்குமார். இவர் உயிரைவிட்ட அந்த நேரத்திலேயே அவரது தியாகத்தை முன்வைத்து ஒரு படம் உருவாவதாக இருந்தது. ஆனால், அது என்ன ஆனதோ தெரியவில்லை. இந்த நிலையில், தற்போது முத்துக்குமாரை ரோல் மாடலாகக்கொண்டு சிப்பாய் என்ற படத்தில் நடிக்கிறார் கடல் கெளதம். இப்படத்தை சிம்பு நடித்த சிலம்பாட்டம் படத்தை இயக்கிய சரவணன் இயக்குகிறார். இதில் நாயகியாக லட்சுமிமேனன் நடிக்கிறார்.
முத்துகுமாரின் மரணம் தமிழ்நாட்டையே பற்றி எரிய வைத்த பரபரப்பான சம்பவம் என்பதால், இந்த படம் வெளியாகிற நேரத்தில் தானும் பரபரப்பாக பேசப்படுவோம் என்று எதிர்பார்க்கிறார் கெளதம். அதனால் வழக்கமான காதல், காமெடி காட்சிகளை விட அப்படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியில் உணர்ச்சிப்பூர்வமான நடிப்பை வெளிப்படுத்தப்போகிறாராம் கெளதம். அதோடு தனது ஹேர்ஸ்டைல், பாடி லாங்குவேஜ் என அனைத்தையும் முத்துக்குமாரைப்போன்றே மாற்றி நடிக்கிறாராம் அவர்