வியாழன், 28 மார்ச், 2013

சுப்பர் சிங்கர் .3.காணொளி

ஞாயிறு, 24 மார்ச், 2013

ஜூலையில் உலகமெங்கும் வெளியாகிறது //

 

இளைய மகள் செளந்தர்யா இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள முதல் படம் கோச்சடையான்.
இந்தியாவில் முதல் 3டி படமான இப்படம் மோஷன் கேப்சரிங் என்ற தொழில் நுட்பத்தில் வெளியாக உள்ளது.
இதில் ரஜினியுடன், தீபிகா படுகோனே, சரத்குமார், ஆதி, ஷோபனா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ள இப்படத்தின் இசை வருகிற மே மாதம் வெளியாகிறது. அதையடுத்து படத்தை ஜூலை மாதத்தில் உலகமெங்கும் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.
தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம், ஜப்பான் என 5 மொழிகளில் தயாராகியுள்ள இப்படம் பல முக்கிய ஏரியாக்களுக்கு விற்பனையாகி விட்டது.
இந்நிலையில், கோச்சடையான் படத்தின் அமெரிக்க உரிமையும் தற்போது விற்பனையாகியுள்ளது.
மேலும் தெலுங்கில் விக்ரம சிங்ஹா என்ற பெயரில் வெளியாகும் கோச்சடையான் படத்தின் உரிமையை கணபதி பிலிம்ஸ் வாங்கியுள்ளதாம்.
 

திருமணம் குறித்து சிந்திக்கவில்லை: நயன்தாரா ?


காதல் தோல்வி ஏமாற்றங்களில் இருந்தும் மீண்டுள்ள நயன்தாரா தமிழ், தெலுங்கு படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.
படப்பிடிப்பில் எல்லோருடனும் கலகலப்பாக பேசி, சகஜமாக பழகுகிறார். ஐதராபாத்திலிருந்த நயன்தாராவுடன் ஒரு பேட்டி.
எதிர் காலத்துக்கென திட்டங்கள் ஏதேனும் வைத்துள்ளீர்களா?
இதற்கு பதில் சொல்ல இயலாது. எதிர் காலம் என்பது நம் கையில் இல்லை. கடவுள் கையில் இருக்கிறது. கடவுள் நினைக்கிற படிதான் எல்லாம் நடக்கும்.
ஸ்ரீராமராஜ்ஜியம் படத்தில் சீதை வேடத்தில் நடித்ததிலிருந்து கவர்ச்சியாக நடிக்க மாட்டேன் என்று மறுத்து வருகிறீர்களாமே?
நான் கவர்ச்சியாக நடிக்க மாட்டேன் என்றோ அல்லது நடிப்பேன் என்றோ எங்கேயும் சொன்னது இல்லை. எப்படி நடிக்க வேண்டும் என்பது என் கையில் இல்லை. கதைதான் முடிவு செய்கிறது.
ஒரு நடிகை எல்லா கதாபாத்திரங்களிலும் நடிக்க தயாராக இருக்க வேண்டும். கதைக்கு கவர்ச்சியோ குடும்ப பாங்கான வேடமோ எது தேவைப்பட்டாலும் அதை கொடுக்கவேண்டும். கதை பிடித்து இருந்தால் என்ன மாதிரி நடிக்க வேண்டுமோ அதன்படி நடிப்பேன்.
நான் கவர்ச்சி, குடும்ப பாங்கு என்று இரு வேடங்களிலும் நடித்து விட்டேன். ரசிகர்கள் கவர்ச்சியாக நடித்த போதும் என்னை ஏற்றனர். குடும்ப பாங்காக நடித்த போதும் ஏற்றனர்.
தமிழில் தற்போது மூன்று படங்கள் கைவசம் உள்ளது. அஜீத், படத்தை முடித்து விட்டு உதயநிதி ஜோடியாக கதிர்வேலன் காதலி படத்தில் நடிக்கிறேன்.
கோவையில் இதன் படப்பிடிப்பு நடக்கிறது. ஐயா படத்துக்கு பின்னர் குடும்ப பெண்ணாக இப்படத்தில் வருகிறேன்.
தமிழில் சிறிய இடை வெளிக்கு பின்னர் வந்தாலும், பிசியாக நடித்துக் கொண்டு இருக்கிறேன். சினிமா வாழ்க்கை நன்றாக போகிறது.
திருமணம் எப்போது?
திருமணத்தை பற்றி நான் யோசிக்கவே இல்லை. என் வாழ்க்கையில் எதிர்பாராதவை நிறைய நடந்துவிட்டன. எது எப்போது வரவேண்டுமோ அதெல்லாம் அவ்வப்போது வந்து போய்விட்டன. எதிர் காலம் என்ன என்பதை நான் சிந்திக்கவில்லை.
 

மீண்டும் கொலிவுட்டில் தீஷா சேத்


கொலிவுட்டில் விக்ரம் நடித்த ராஜபாட்டை படத்தின் மூலம் அறிமுகமான தீக்ஷா சேத் நீண்ட இடைவேளைக்கு பின்பு மீண்டும் கொலிவுட்டிற்கு திரும்பியுள்ளார்.
ராஜபாட்டை படத்திற்கு பின்பு எதிர்பார்த்த வாய்ப்பு கிடைக்காததால் தெலுங்கு பக்கம் கவனம் செலுத்தி வந்தார்.
தெலுங்கில் ரவி இயக்கத்தில் கோபிசந்த் ஜோடியாக நடித்த வான்டட் என்ற படம் கொலிவுட்டில் வேங்கை புலி என்ற பெயரில் மொழிமாற்றம் ஆகிறது.
வசதியான குடும்பத்தை சேர்ந்த கோபிசந்த் தீக்ஷாவை சந்திக்கிறார். அவரிடம் தன் காதலை வெளிப்படுத்துகிறார்.
அதை ஏற்க மறுக்கிறார் தீக்ஷா. ‘காதலுக்காக உயிரைவிடவும் தயார் என்று கோபி கூறுகிறார். அதற்கு தீக்ஷா, உயிரை விட வேண்டாம் 3 பேரின் உயிரை எடுக்க வேண்டும் என்கிறார்.
அதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த கோபி, காதலுக்காக 3 பேரை கொல்கிறார். எதற்காக அவர்களை தீக்ஷா கொலை செய்யச் சொன்னார் என்பதை படம் விளக்கும்.
இதில் பிரகாஷ்ராஜ், நாசர் நடிக்கும் இப்படத்திற்கு

திங்கள், 18 மார்ச், 2013

பாட்டுக்கு ஒரு குட்டி ஆட்டம் ,.,

இளம் தளிரின் மிகவும் அட் புதமான கண்ணுக்கு விருந்து உட்டும்நடனக்காட்சி [காணொளி}
 

சனி, 16 மார்ச், 2013

ரீமா கல்லிங்கல் மலையாளப் படங்களில் நடிக்க தடை,


மலையாளப் படங்களில் முன்னணி நடிகையாக திகழும் ரீமா கல்லிங்கல், கொலிவுட்டில் பரத் ஜோடியாக யுவன் யுவாதி படத்தில் நடித்தார்.
மலையாள நடிகர், நடிகைகள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்க கேரள திரைப்பட வர்த்தக சபை தடை விதித்து உள்ளது.
இதனால் நடிகர், நடிகைகள் யாரும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்பதோ, நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதோ இல்லை.
ஆனால் ரீமா கல்லிங்கல் இதை மீறி "மிடுக்கி" என்ற மலையாள தொலைகாட்சி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
இதற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியது. மலையாள நடிகர்கள் சித்திக், ஜெகதீஷ் ஆகியோர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தனர்.
தடை விதிக்கப்பட்டதும் அதில் இருந்து விலகினர். ஆனால் ரீமா கல்லிங்கல் மட்டும் தடையை பொருட்படுத்தாமல் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
இதையடுத்து மலையாளப் படங்களுக்கு ரீமா கல்லிங்கலை ஒப்பந்தம் செய்யக்கூடாது என்று கேரள திரைப்பட வர்த்தக சபை அதிரடி தடை உத்தரவு பிறப்பித்து உள்ளது.
நடிகர் சுரேஷ் கோபியும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தார். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை முடித்த பின்பே சினிமாவில் நடிப்பேன் என்று அறிவித்ததால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை
 

சனி, 9 மார்ச், 2013

ஆடம்பரக்கதவுகளோரம் & வெளிநாடு,,,

நாட்டில் எல்லோரும் இப்படி இல்லை. சில பேர் மட்டும் தான் . இது யாரையும் புண்படுத்துவதற்காக இல்லை. வெளிநாடு வாழ்க் கையின் உண்மைகளை வெளிக்கொண்டு வரும் முயற்ச்சி மட்டும் தான் {காணொளி}

வெள்ளி, 8 மார்ச், 2013

ஜப்பானில் சித்தார்த்- ஹன்ஷிகா,.


ஜோடியின் ரொமான்ஸ் ,தீயா வேலை செய்யணும் குமாரு படத்துக்காக நாயகன் சித்தார்த்- நாயகி ஹன்ஷிகா ஜோடியின் ரொமான்ஸ் பாடலை ஜப்பானில் படமாக்க திட்டமிட்டுள்ளார் இயக்குனர் சுந்தர்.சி.
நட்புக்காக 'தீயா வேலை செய்யணும் குமாரு' படத்தில் சிறிய வேடத்தில் கொலிவுட் நாயகன் விஷால் வருகிறார்.
அவருக்கே உரிய தோரணையில் படத்தின் காட்சியில் நடிப்பார். கொமெடியன் சந்தானம் படத்தில் லவ் குருவாக வந்து சிரிக்க வைப்பார்.
இந்தப்படத்தில் நீங்க நடிக்க வேண்டும் என்று விஷாலிடம் சொன்னதும் உடனே யோசிக்காமல் 'ஒ.கே' சொல்லி என்னை வியக்க வைத்தார்.
சென்னையில் படப்பிடிப்பு முடிந்த பின்னர் ஏப்ரல் மாதம் ஜப்பானில் சித்தார்த்- ஹன்ஷிகா ஜோடி நடிக்கும் படத்தின் பாடல்களை படமாக்குகிறோம் என்கிறார் 'தீயா வேலை செய்யணும் குமாரு' பட இயக்குனர் சுந்தர்.சி.
 

திங்கள், 4 மார்ச், 2013

100 திரையரங்குகளில் வசந்த மாளிகை


நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்து 1972ம் ஆண்டில் திரைக்கு வந்த படம் வசந்த மாளிகை.
இந்த படத்தில் சிவாஜி கணேசனின் ஜோடியாக வாணிஸ்ரீ நடித்திருந்தார். டி.ராமாநாயுடு தயாரித்து, கே.எஸ்.பிரகாஷ்ராவ் இயக்கியிருந்தார்.
வசந்த மாளிகை வெளியான காலகட்டத்தில் 13 திரையரங்குகளில் 100 நாட்களை தாண்டியும் 3 திரையரங்குகளில் 175 நாட்களை கடந்தும் ஒரே ஒரு திரையரங்கில் 200 நாட்களை தாண்டியும் ஓடி வெற்றி பெற்றது.
41 வருடங்களுக்குப் பின்னர், ‘வசந்த மாளிகை’ படம் டி.டி.எஸ். மற்றும் ‘சினிமாஸ்கோப்’பில் அகன்ற திரைப்படமாக புதுப்பிக்கப்பட்டிருக்கிறது.
நவீன தொழில்நுட்பங்களுடன் புதுப்பிக்கப்பட்ட இந்த படம், தமிழ்நாடு முழுவதும் 100 திரையரங்குகளில் வெளியிடப்படுகிறது