ஞாயிறு, 15 மார்ச், 2015

எல்லாம் அவன் செயல் என் வழி தனி வழி??

நடிகர் :ஆர்.கே,ராதாரவி, விவேக், அன்பாலயா பிரபாகரன், தம்பி ராமய்யா, சிங்கமுத்து, மதன்பாப், நடிகை :பூனம் கவுர், மீனாட்சி தீக்ஷித் ,ரோஜா, சீதா, இயக்குனர் :ஷாஜி கைலாஷ் இசை :ஸ்ரீகாந்த் தேவா ஒளிப்பதிவு :
ராஜரத்னம்
கதையின் கரு: சமூக விரோதிகளை வேட்டையாடும் போலீஸ் அதிகாரி.
‘எல்லாம் அவன் செயல் படத்தை அடுத்து ஆர்.கே-ஷாஜி கைலாஷ் கூட்டணியில் வந்திருக்கும் படம். ஆர்.கே. ஒரு என்கவுன்டர் போலீஸ் அதிகாரி. சமூக விரோதிகளை அவர் களையெடுப்பதால் பகையை சம்பாதிக்கிறார். இந்த பகையால் பாசமுள்ள தாயை
 பறிகொடுக்கிறார். தாயை கொன்றவர்களை இவர் போட்டுத்தள்ளி விட்டு, சட்டத்தின் முன்பு குற்றவாளியாக நிற்கிறார். அதில் இருந்து அவர் விடுபட்டாரா, அவரை உருகி உருகி காதலிக்கும் முறைப்பெண் பூனம் கவுரின் காதல் என்ன ஆகிறது? என்பது படத்தின் மீதி கதை.

என்கவுன்டர் போலீஸ் அதிகாரியாக ஆர்.கே. மிடுக்குடனும், முறுக்குடனும் வந்து மிரட்டுகிறார். அழகான பூனம் கவுருடன் டூயட் பாடுகிறார்.

ஆர்.கே.யை சுற்றும் முறைப்பெண்ணாக பூனம் கவுர், கலர் கலரான உடைகளில் டூயட் பாடிவிட்டு போகிறார். இன்னொரு நாயகி மீனாட்சி தீட்சித் கையில் துப்பாக்கியை கொடுத்து விடுகிறார்கள்.

ராதாரவி, ராஜீவ்கிருஷ்ணா, ஆசிஷ் வித்யார்த்தி என வில்லன்கள் கூட்டம், பயமுறுத்துகிறது. அரசியல்வாதியாக வரும் ரோஜா கதாபாத்திரத்தில் தெலுங்கு வாசனை வீசினாலும், ரசிக்க வைக்கிறது.
தம்பிராமய்யாவும், சிங்கமுத்துவும் திருடர்களாக வந்து காமெடி கல்லா கட்டுகிறார்கள். ஆர்.கே.யின் அம்மாவாக வந்து சீதா அனுதாபத்தை அள்ளுகிறார். விசு, அஜய் ரத்னம், டி.பி.கஜேந்திரன், கராத்தே ராஜா ஆகியோர் கதாபாத்திரங்களாக மனதில் நிற்கிறார்கள்.

ஸ்ரீகாந்த் தேவாவின் இசையில், கவிஞர் வைரமுத்துவின் வரிகள் கவனம் பெறுகின்றன.
பரபர காட்சிகளில், கதாநாயகன்- வில்லன்கள் மோதல்கள்- துரத்தல்களில், மற்றும் ஜோர்டான் பாடல் காட்சியில் ஒளிப்பதிவாளர் ராஜரத்னத்தின் உழைப்பு தெரிகிறது.
படத்தின் இறுதி காட்சிகளில் ஆர்.கே. பேசும் வசனங்களில், சாட்டையடி. அரசின் நலத்திட்டங்களை தனியாரிடம் காண்டிராக்ட் விடாமல், வெளிநாடுகளைப் போல்
 ராணுவம் வசம் ஒப்படைக்க வேண்டும் என்ற வி.பிரபாகரின் வசன வரிகள் தியேட்டரில் வரவேற்பை பெறுகின்றன.
இடைவேளை வரை டுமீல்... டுமீல்... என்று ஒரே துப்பாக்கி சத்தம். இடைவேளைக்குப்பின், கதை வேகமாக நகர்கிறது. போலீசுக்கான விறைப்பு குறையாத கதையால்-அதை சொன்ன விதத்தால் நிமிர்ந்து உட்கார வைக்கிறார், டைரக்டர் ஷாஜி கைலாஷ்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>



ஞாயிறு, 8 மார்ச், 2015

சந்தானம் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளாராம்!

 தமிழ் சினிமாவில் கவுண்டமணி, செந்தில், வடிவேலுக்கு பிறகு காமெடியில் கலக்கி வருப்பவர் சந்தானம். இவருடைய டைமிங் காமெடி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதனால் ஏராளமான பட வாய்ப்புகள் அவருக்கு குவிந்தன. தற்போது காமெடியில் இருந்து மாறுப்பட்டு ஹீரோவாகவும் நடித்து வருகிறார். இவர் ஹீரோவாக நடித்த வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படம் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் ஒரு சில படங்களில் ஹீரோவாக நடிப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் அவரைப்பற்றிய தகவல் ஒன்று வெளிவந்திருக்கிறது. அதாவது நடிகர் சந்தானம் இதுவரை 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளாராம். இதை அவரே தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் தனது 35–வது பிறந்த நாளை முன்னிட்டு திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார் சந்தானம். பிறகு ஆட்டோவில் கிரிவலம் சென்ற அவர் கிரிவலப்பாதையில் உள்ள அஷ்டலிங்க கோவில்களிலும் இறங்கி தரிசனம் செய்தார்.

அப்போது முதியவர்களுக்கு அன்னதானம், போர்வை வழங்கினார். பிறகு பேட்டியளித்த சந்தானம், எனது பிறந்த நாளை முன்னிட்டு கோவிலுக்கு வந்தேன். இதுவரை 200 படங்கள் நடித்துள்ளேன். தற்போது 5 படங்களில் நடித்து வருகிறேன். அதில் ஒரு படத்தில் கதாநாயகனாக நடிக்கிறேன். எனது ரசிகர்கள் எப்போதும் மகிழ்ச்சியுடன் சிரித்து கொண்டே இருக்க வேண்டும் என்று கூறினார். தமிழ் சினிமாவில் அறிமுகமாகி குறுகிய காலத்திலேயே 200 படங்களில் நடித்துள்ள சந்தானம் கூடிய விரைவில் 1000 படங்கள் நடித்து சாதனை புரிவாரா..? என்று பொருந்திருந்து பார்ப்போம்.

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

ஹீரோவாக மாறி நடிகையின் உயிரை காப்பாற்றிய நடிகர்?

 மதராச பட்டினம், ஐ, ஆகிய படங்களில் நடித்த எமிஜாக்சன் அடுத்த உயதநிதி ஸ்டாலினுடன் சேர்ந்து மான் கரேத்தே படத்தின் இயக்குநர் திருக்குமரன் இயக்கத்தில் இன்னும் பெயரிடதா படத்தில் நடித்து இருக்கிறார்கள். 
உதயநிதி உடன் எமிஜாக்சன், கருணாகரன் பங்குபெற்ற இப்படத்திற்கான முதல் ஷெட்யூல் கேரளாவில் நடைபெற்றது. பிப்ரவரி 22 ஆம் தேதி தொடங்கிய இந்த முதல் ஷெட்யூல் முடிந்துவிட்டதாக நடிகை எமி ஜாக்ஸன் தனது டுவிட்டரில் தெரிவித்த்துள்ளார்.
கேரளாவில் உள்ள மலைப்பகுதியில் படபிடிப்பு நடத்தி கொண்டிருந்த படக்குழுவினர். எமிஜாக்சன் பைக்கை ஸ்டார்ட் செய்வது போலவும் உதயநிதி ஸ்டாலின் பை ஓட்டுவது போலவும், படமாக்க படக்குழுவினர் திட்டமிட்டு இருந்தனர்.
ஆனால் படபிடிப்பு தளத்தில் எமிஜாக்சன் பைக்கை ஸ்டார்ட் செய்தார்  எதிர்பாரதவிதமாக பைக் தனது கட்டுபாட்டை இழந்து அருகில் இருக்கும் மலைக்கு விளிம்பில் சென்றது உடனடியாக அருகில் நின்ற காமெடி நடிகர் கருணாகரன்  சுதாரித்து கொண்டு 
பைக்கை நிறுத்தி எமிஜாக்சனை காப்பாற்றினார்.உடனடியாக படிப்பிடிப்பு நிறுத்தபட்டது.
இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் எமிஜாக்சன் தனது டுவிட்டரில் என் உயிரை காப்பாற்றிய கருணாவிற்கு நன்றி என்று குறிப்பிட்டு உள்ளார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>