திங்கள், 23 நவம்பர், 2015

தேசிய விருது பெற்ற பாடகி.விஜய் மகளுக்கு குரல் கொடுக்கின்றார்

இளையதளபதி விஜய் நடித்து வரும் 'விஜய் 59' படத்தின் படப்பிடிப்பு ஒருபுறம் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் இந்த படத்தின் பாடல்களை கம்போஸ் செய்யும் இறுதிகட்ட பணியில் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் மற்றொரு புறம் ஈடுபட்டுள்ளதாக
 கூறப்படுகிறது
இந்த படத்திற்காக ஏற்கனவே விஜய் ஒரு பாடலை பாடி முடித்துவிட்ட நிலையில் இன்னொரு பாடலை அவர் விரைவில் பாடவுள்ளார். இந்நிலையில் இந்த படத்தில் விஜய்யின் மகளாக நடிக்கும் மீனாவின் மகளுக்கும் ஒரு பாடல் இருப்பதாகவும், அந்த பாடலை 
சமீபத்தில்
 ரிலீஸான 'சைவம்' படத்தில் ஒரு பாடலை பாடியதற்காக தேசிய விருது பெற்ற உன்னிகிருஷ்ணன் மகள் உத்தாரா பாடவுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.
'சைவம்' படத்தில் தேசிய விருது பெற்றது போலவே இந்த படத்தின் பாடலுக்காகவும் உத்தாரா தேசிய விருது பெறுவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

வெள்ளி, 2 அக்டோபர், 2015

சண்டியன்” திரைப்படத்தை கவிமாறன் சிவா “இயக்கி வருகிறார்

ஈழ சினிமாவில் அக்சன் படங்கள் மூலம் தனக்கென்று ஒரு தனி இடத்தை பிடித்து தடம் பதித்து வரும் இயக்குனர் கவிமாறன் சிவா தனது மூன்றாவது திரைப்படமான “சண்டியன் திரைப்படத்தை யாழ்ப்பாணத்தில் தற்போது விறுவிறுப்பாக இயக்கி வருகிறார்,
இந்த திரைப்படத்தின் முதல் பார்வை தற்ப்போது உத்தியோகபூர்வமாக வெளியாகி உள்ளது 
“சண்டியன் “திரைப்பட குழுவினருக்கு எமது வாழ்த்துக்கள் .
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>



புதன், 26 ஆகஸ்ட், 2015

ஈழத்து நடிகை திவ்யாவின் துணிச்சல்! காணொளி இணைப்பு

உண்மையில் அந்த காணொளி யை  பார்த்து வியந்து போனேன். இந்தப் பிரச்சனைக்கு இப்படி ஒரு முடிவு வரும் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை.

தமிழ்நாட்டு சினிமாவின் நடிகைகள் சம்பந்தமான நிர்வாண ஒளிப்படங்கள், காணொளிகள் வந்திருக்கின்றன. அவைகளில் பெரும்பாலானவை போலியானவை.
ஆயினும் சில உண்மையான ஒளிப்படங்களும் வந்திருக்கின்றன. அண்மையில் நடிகை வசுந்தராவின் படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.
இப்படி படங்கள் வெளியான நேரங்களில் எல்லாம் இந்த நடிகைகள் செய்வது ஒன்றைத்தான். ‘அது என்னுடைய படம் இல்லை, கணணியில் ஒட்ட வைத்த படம்’ என்று ஒரேயடியாக சாதித்து விடுவார்கள்.
இப்படியான பிரச்சனைகளில் இருந்து ஒடி ஒளிந்த நடிகைகளைத்தான் பார்த்திருக்கிறேன். இதை சரியான முறையில் எதிர்கொண்ட நடிகைகளை இதுவரை கண்டதில்லை.
ஈழத்து நடிகை திவ்யா இதை சரியான முறையில் எதிர்கொண்டிருக்கிறார் என்று சொல்வேன். இந்த சமூகத்தின் மீது அவர் காறி உமிழ்ந்திருக்கிறார்.
திவ்யா ஓடி ஒளியவில்லை. ‘அது தன்னுடைய கைத்தொலைபேசயில் எடுத்ததுதான், திருத்தக் கொடுத்த இடத்தில் சிலர் அதை வெளியிட்டு விட்டார்கள்’ என்று வெகு அலட்சியமாக அறிவித்து விட்டார்.

தனது காணொளியை வைத்து சில ஊடகங்கள் சக கலைஞர்களை இழிவுபடுத்தியதற்காக, கலைஞர்களிடமும் பொது மக்களிடமும் மன்னிப்பும் கோரியிருக்கிறார்.
தன்னைப் பற்றி கேவலமாக எழுதி, அவர்கள் தங்களையே கேவலப்படுத்துகிறார்கள் என்றும் நான் எதற்கும் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்றும் சாட்டையடியாக பதில் கொடுத்திருக்கிறார்.

அந்த காணொளி முழுதும், அவர் சக கலைஞர்கள் மீது பழி சுமத்தப்பட்டதற்கே விளக்கம் கொடுக்க முனைகிறார். தன்னுடைய வீடியோ பற்றி அவர் அதிகம் பேசவில்லை.

இதை ஒரு இளம் பெண்ணின் அசட்டுத் துணிச்சல் என்று எடுத்துக் கொள்ள முடியவில்லை. இந்த சமூகத்தின் பெண் பற்றியதும், நிர்வாணம் பற்றியதுமான பார்வை அலட்சியப்படுத்தப்பட வேண்டிய ஒன்று என்கின்ற ஆழமான புரிதல் அவருக்கு இருப்பதாகவே நான் நம்புகின்றேன்.
அவருடைய துணிச்சலுக்கு தலை வணங்குகின்றேன்.

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

திங்கள், 15 ஜூன், 2015

காதலை காதலிக்கின்றேன் குறும்படம்


காதலை காதலிக்கின்றேன்படத்தின் காணொளி இணைப்பு
  இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

ஞாயிறு, 15 மார்ச், 2015

எல்லாம் அவன் செயல் என் வழி தனி வழி??

நடிகர் :ஆர்.கே,ராதாரவி, விவேக், அன்பாலயா பிரபாகரன், தம்பி ராமய்யா, சிங்கமுத்து, மதன்பாப், நடிகை :பூனம் கவுர், மீனாட்சி தீக்ஷித் ,ரோஜா, சீதா, இயக்குனர் :ஷாஜி கைலாஷ் இசை :ஸ்ரீகாந்த் தேவா ஒளிப்பதிவு :
ராஜரத்னம்
கதையின் கரு: சமூக விரோதிகளை வேட்டையாடும் போலீஸ் அதிகாரி.
‘எல்லாம் அவன் செயல் படத்தை அடுத்து ஆர்.கே-ஷாஜி கைலாஷ் கூட்டணியில் வந்திருக்கும் படம். ஆர்.கே. ஒரு என்கவுன்டர் போலீஸ் அதிகாரி. சமூக விரோதிகளை அவர் களையெடுப்பதால் பகையை சம்பாதிக்கிறார். இந்த பகையால் பாசமுள்ள தாயை
 பறிகொடுக்கிறார். தாயை கொன்றவர்களை இவர் போட்டுத்தள்ளி விட்டு, சட்டத்தின் முன்பு குற்றவாளியாக நிற்கிறார். அதில் இருந்து அவர் விடுபட்டாரா, அவரை உருகி உருகி காதலிக்கும் முறைப்பெண் பூனம் கவுரின் காதல் என்ன ஆகிறது? என்பது படத்தின் மீதி கதை.

என்கவுன்டர் போலீஸ் அதிகாரியாக ஆர்.கே. மிடுக்குடனும், முறுக்குடனும் வந்து மிரட்டுகிறார். அழகான பூனம் கவுருடன் டூயட் பாடுகிறார்.

ஆர்.கே.யை சுற்றும் முறைப்பெண்ணாக பூனம் கவுர், கலர் கலரான உடைகளில் டூயட் பாடிவிட்டு போகிறார். இன்னொரு நாயகி மீனாட்சி தீட்சித் கையில் துப்பாக்கியை கொடுத்து விடுகிறார்கள்.

ராதாரவி, ராஜீவ்கிருஷ்ணா, ஆசிஷ் வித்யார்த்தி என வில்லன்கள் கூட்டம், பயமுறுத்துகிறது. அரசியல்வாதியாக வரும் ரோஜா கதாபாத்திரத்தில் தெலுங்கு வாசனை வீசினாலும், ரசிக்க வைக்கிறது.
தம்பிராமய்யாவும், சிங்கமுத்துவும் திருடர்களாக வந்து காமெடி கல்லா கட்டுகிறார்கள். ஆர்.கே.யின் அம்மாவாக வந்து சீதா அனுதாபத்தை அள்ளுகிறார். விசு, அஜய் ரத்னம், டி.பி.கஜேந்திரன், கராத்தே ராஜா ஆகியோர் கதாபாத்திரங்களாக மனதில் நிற்கிறார்கள்.

ஸ்ரீகாந்த் தேவாவின் இசையில், கவிஞர் வைரமுத்துவின் வரிகள் கவனம் பெறுகின்றன.
பரபர காட்சிகளில், கதாநாயகன்- வில்லன்கள் மோதல்கள்- துரத்தல்களில், மற்றும் ஜோர்டான் பாடல் காட்சியில் ஒளிப்பதிவாளர் ராஜரத்னத்தின் உழைப்பு தெரிகிறது.
படத்தின் இறுதி காட்சிகளில் ஆர்.கே. பேசும் வசனங்களில், சாட்டையடி. அரசின் நலத்திட்டங்களை தனியாரிடம் காண்டிராக்ட் விடாமல், வெளிநாடுகளைப் போல்
 ராணுவம் வசம் ஒப்படைக்க வேண்டும் என்ற வி.பிரபாகரின் வசன வரிகள் தியேட்டரில் வரவேற்பை பெறுகின்றன.
இடைவேளை வரை டுமீல்... டுமீல்... என்று ஒரே துப்பாக்கி சத்தம். இடைவேளைக்குப்பின், கதை வேகமாக நகர்கிறது. போலீசுக்கான விறைப்பு குறையாத கதையால்-அதை சொன்ன விதத்தால் நிமிர்ந்து உட்கார வைக்கிறார், டைரக்டர் ஷாஜி கைலாஷ்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>



ஞாயிறு, 8 மார்ச், 2015

சந்தானம் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளாராம்!

 தமிழ் சினிமாவில் கவுண்டமணி, செந்தில், வடிவேலுக்கு பிறகு காமெடியில் கலக்கி வருப்பவர் சந்தானம். இவருடைய டைமிங் காமெடி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதனால் ஏராளமான பட வாய்ப்புகள் அவருக்கு குவிந்தன. தற்போது காமெடியில் இருந்து மாறுப்பட்டு ஹீரோவாகவும் நடித்து வருகிறார். இவர் ஹீரோவாக நடித்த வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படம் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் ஒரு சில படங்களில் ஹீரோவாக நடிப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் அவரைப்பற்றிய தகவல் ஒன்று வெளிவந்திருக்கிறது. அதாவது நடிகர் சந்தானம் இதுவரை 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளாராம். இதை அவரே தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் தனது 35–வது பிறந்த நாளை முன்னிட்டு திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார் சந்தானம். பிறகு ஆட்டோவில் கிரிவலம் சென்ற அவர் கிரிவலப்பாதையில் உள்ள அஷ்டலிங்க கோவில்களிலும் இறங்கி தரிசனம் செய்தார்.

அப்போது முதியவர்களுக்கு அன்னதானம், போர்வை வழங்கினார். பிறகு பேட்டியளித்த சந்தானம், எனது பிறந்த நாளை முன்னிட்டு கோவிலுக்கு வந்தேன். இதுவரை 200 படங்கள் நடித்துள்ளேன். தற்போது 5 படங்களில் நடித்து வருகிறேன். அதில் ஒரு படத்தில் கதாநாயகனாக நடிக்கிறேன். எனது ரசிகர்கள் எப்போதும் மகிழ்ச்சியுடன் சிரித்து கொண்டே இருக்க வேண்டும் என்று கூறினார். தமிழ் சினிமாவில் அறிமுகமாகி குறுகிய காலத்திலேயே 200 படங்களில் நடித்துள்ள சந்தானம் கூடிய விரைவில் 1000 படங்கள் நடித்து சாதனை புரிவாரா..? என்று பொருந்திருந்து பார்ப்போம்.

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

ஹீரோவாக மாறி நடிகையின் உயிரை காப்பாற்றிய நடிகர்?

 மதராச பட்டினம், ஐ, ஆகிய படங்களில் நடித்த எமிஜாக்சன் அடுத்த உயதநிதி ஸ்டாலினுடன் சேர்ந்து மான் கரேத்தே படத்தின் இயக்குநர் திருக்குமரன் இயக்கத்தில் இன்னும் பெயரிடதா படத்தில் நடித்து இருக்கிறார்கள். 
உதயநிதி உடன் எமிஜாக்சன், கருணாகரன் பங்குபெற்ற இப்படத்திற்கான முதல் ஷெட்யூல் கேரளாவில் நடைபெற்றது. பிப்ரவரி 22 ஆம் தேதி தொடங்கிய இந்த முதல் ஷெட்யூல் முடிந்துவிட்டதாக நடிகை எமி ஜாக்ஸன் தனது டுவிட்டரில் தெரிவித்த்துள்ளார்.
கேரளாவில் உள்ள மலைப்பகுதியில் படபிடிப்பு நடத்தி கொண்டிருந்த படக்குழுவினர். எமிஜாக்சன் பைக்கை ஸ்டார்ட் செய்வது போலவும் உதயநிதி ஸ்டாலின் பை ஓட்டுவது போலவும், படமாக்க படக்குழுவினர் திட்டமிட்டு இருந்தனர்.
ஆனால் படபிடிப்பு தளத்தில் எமிஜாக்சன் பைக்கை ஸ்டார்ட் செய்தார்  எதிர்பாரதவிதமாக பைக் தனது கட்டுபாட்டை இழந்து அருகில் இருக்கும் மலைக்கு விளிம்பில் சென்றது உடனடியாக அருகில் நின்ற காமெடி நடிகர் கருணாகரன்  சுதாரித்து கொண்டு 
பைக்கை நிறுத்தி எமிஜாக்சனை காப்பாற்றினார்.உடனடியாக படிப்பிடிப்பு நிறுத்தபட்டது.
இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் எமிஜாக்சன் தனது டுவிட்டரில் என் உயிரை காப்பாற்றிய கருணாவிற்கு நன்றி என்று குறிப்பிட்டு உள்ளார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

திங்கள், 26 ஜனவரி, 2015

ஓரங்கட்டிய சிவகார்த்திகேயன் தனுஷை ! தனுஷும் ஒரு காரணம்!

ஓரங்கட்டிய சிவகார்த்திகேயன் தனுஷை ! தனுஷும் ஒரு காரணம்! 
சிவகார்த்திகேயன் இன்று இந்த நிலைமையில் இருக்கிறார் என்றால் கண்டிப்பாக அதற்கு தனுஷும் ஒரு காரணம். ஆனால், தற்போது தனுஷையே இவர் முந்தும் அளவிற்கு வளர்ந்து விட்டார். இவர் நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும் படம் காக்கி சட்டை, 
இப்படத்தையும் தனுஷ் தான் தயாரித்துள்ளார். இந்த படத்தின் ட்ரைலர் தற்போது வரை 18 லட்சத்தை எட்டியுள்ளது. ஆனால், தனுஷின் அனேகன் படத்தின் ட்ரைலர் 17 லட்சத்தை தான் தொட்டுள்ளது, மேலும், வியாபாரத்திலும் சிவகார்த்திகேயன் கை கொஞ்சம் ஓங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

ஞாயிறு, 25 ஜனவரி, 2015

அப்படியெல்லாம் சொல்லாதீங்க..! தமிழ் திரையுலகில்??

சரத்குமாருக்கு ஜோடியாக ஐயா படம் மூலம் அறிமுகமானவர் நயன்தாரா. அதன்பிறகு தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான ரஜினி, 
விஜய், அஜித், சூர்யா தனுஷ், சிம்பு, ஆர்யா என அனைத்து ஹீரோக்களுடனும் நடித்து விட்டார். தமிழைப்போலவே 
தெலுங்கு சினிமாவிலும் முன்னணி நடிகையாக இருக்கிறார். நயன்தாராவுடன் எப்படியாவது டூயட் பாட வேண்டுமென்று துடியாய் துடித்துக்கொண்டு இருக்கின்றனர் பல இளவட்ட ஹீரோக்கள். தற்போது இருக்கும் ஹீரோக்களின் ஃபேவரட் ஹீரோயின் யார் என்றால் அது நயன்தாரா தான்.
அந்த அளவிற்கு அழகும், இவருடைய மார்கெட்டும் உச்சத்தில் இருக்கிறது. தற்போது நடிக்க வந்து 10 ஆண்டுகளுக்கு பிறகும்கூட முன்வரிசை ஹீரோக்களுக்கு ஜோடியாகவே நடித்துக்கொண்டிருக்கிறார். இதனால் நயன்தாராவை தமிழ் சினிமாவின் 
நம்பர் 1 கதாநாயகியாக கூறி வருகின்றனர். இது சமீபத்தில் நயன்தாராவின் காதில் விழுந்தால் உடனே சொன்னவர்களை அழைத்து, அப்படியெல்லாம் சொல்லாதீங்க. கோலிவுட்டில் நான் மட்டுமில்லை. எத்தனையோ நடிகைகள் இருக்கிறார்கள். எல்லா நடிகைகளுமே நம்பர் 1 தான். வெற்றி தோல்வியை அனைவருமே சந்திக்கிறோம்.
அதனால், சீனியாரிட்டியை கருத்தில் கொண்டு என்னை நம்பர்1 நடிகை என்று சொல்ல வேண்டாம். கோலிவுட்டில் இருக்கும் முன்னணி நடிகைகளில் நானும் ஒருத்தி. இங்கே யாருக்கும் எதுவும்
 நிரந்தரமில்லை என்று சொல்கிறார் நயன்தாரா. நயன்தாரா தற்போது உதயநிதியுடன் நண்பேன்டா, ஜெயம் ரவியுடன் தனி ஒருவன், 5 வயது குழந்தைக்கு தாயாக மிட் நைட் எக்ஸ்பிரஸ், விஜய் சேதுபதியுடன் நானும் ரெளடிதான், சூர்யாவுடன் மாஸ், சிம்புவுடன் இது நம்ம ஆளு போன்ற படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

சனி, 24 ஜனவரி, 2015

ஹன்சிகாவின் அனுபவ பகிர்வு! காதலிப்பது என்பது கலை!

காதலிப்பது பெரிய கலை என்று ஹன்சிகா கூறினார். ஹன்சிகாவின் ‘ஆம்பள’ படம் பொங்கலுக்கு ரிலீசாகி ஓடிக் கொண்டு இருக்கிறது. சிம்புவுடன் நடிக்கும் வாலு, ஜெயம்ரவியுடன் நடிக்கும் ரோமியோ ஜுலியட், சித்துவுடன் நடிக்கும் உயிரே உயிரே படங்கள் 
முடிவடைந்து ரிலீசுக்கு தயாராகின்றன. விஜய்யுடன் புலி படத்தில் தற்போது நடித்துக் கொண்டு இருக்கிறார். சிம்புவுடன் காதல் சர்ச்சைகளில் ஏற்கனவே சிக்கினார். இப்போது இருவரும் பிரிந்துள்ளனர். காதல் பற்றி ஹன்சிகா கூறியதாவது...
காதலிப்பது சாதாரண விஷயம் இல்லை. பெரிய கலை. பெண்களை விட ஆண்களுக்கு இந்த கலை எளிதாக வரும். ஆண்கள் காதலிக்கிறார்களா? இல்லையா? என்பது அவர்கள் கண்களை பார்த்தாலே 
தெரிந்து விடும். சிலர் பார்வையாலேயே காதலை சொல்வார்கள். பெண்ணை வைத்த கண் வாங்காமல் விழுங்கி விடுவது போல் பார்ப்பார்கள். காதலை எளிதாக சொல்லி விடவும் செய்வார்கள். பெண்கள் அப்படி இல்லை. அவர்கள் காதலிக்கிறார்களா?
 என்பதை கண்டு பிடிப்பது சிரமம்.
காதலை வெளிப்படுத்தாமல் மனதுக்குள்ளேயே வைத்து இருப்பார்கள். நீண்ட நாட்கள் கழித்துதான் காதலை சொல்வார்கள். சொந்த அனுபவம் மூலம் இவற்றை நான் தெரிந்து கொண்டதாக யாரும் கருத வேண்டாம். காதலிக்கும் தோழிகளை பார்த்துதான் இவற்றை அறிந்தேன். இவ்வாறு ஹன்சிகா கூறினார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>