ஞாயிறு, 30 மார்ச், 2014

பவதாரணி அப்பாவின் ரசிகர் மன்றத்துக்கு தலைவராகிறார்


இசைஞானி இளையராஜா சினிமாவுக்கு வந்து 30 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. இவருக்கு உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள், நலம் விரும்பிகள் இருக்கின்றனர். அவர்கள் அனைவரையும் ஒன்று சேர்க்கும் வகையில் “இளையராஜா ரசிகர்கள் மன்றம்” (ILAYARAJA FANS CLUB) தொடங்க உள்ளது. இளையராஜாவின் அங்கீகாரத்துடன் அவரது மகன் கார்த்திக்ராஜா தலைமையில், தயாரிப்பாளர் பி.வேலுச்சாமி , டைரக்டர் ரத்னகுமார் ஆகியோரை மேனேஜிங் டிரஸ்டிகளாக கொண்டு அரசாங்க அங்கீகாரத்துடன் இந்த மன்றம் ஆரம்பமாக உள்ளது. இதில் கார்த்திக் ராஜாவுக்கு நிறைய பணிகள் இருப்பதால் அவருக்கு பதில் இளையராஜா மகள் பவதாரணி தலைவராக செயல்பட உள்ளார். ஏப்ரல் 5ந் தேதி மதுரை தமுக்கம் மைதனாத்தில் நடக்கும் விழாவில் இந்த மன்றம் துவங்கவுள்ளது. இதுகுறித்து பவதாரணி கூறுகையில், அப்பாவின் ரசிகர் மன்றம் மூலம் நிறைய நல்ல காரியங்களை செய்ய உள்ளோம். தற்போது வரை சுமார் 1கோடிக்கும் அதிகமானோர் அப்பாவின் ரசிகர் மன்றத்தில் இணைந்துள்ளனர் என்று கூறினார்.

சனி, 22 மார்ச், 2014

சசிகுமார், வரலட்சுமியை கிழி, கிழி, கிழிக்கும் பாலா

பரதேசி படத்திற்கு பிறகு டைரக்டர் பாலா இயக்கும் படம் தாரை தப்பட்டை.
இந்த படத்தில் சசிகுமார் ஜோடியாக நடிக்க வரலெட்சுமி சரத்குமார் ஒப்பந்தமாகி இருக்கிறார்.
பொதுவாக பாலாவின் படத்தில் நடிப்பவர்களை பென்டெடுப்பார் என்பது தெரிந்த விஷயம்தானே.
வெஸ்டர்ன் நடனத்தில் தேர்ச்சி பெற்ற வரலட்சுமி பாலா படத்திற்காக கரகாட்டத்தை முறைப்படி கற்க தஞ்சையை காலையில் தொடங்கி மாலைவரை பயிற்சி பெற்று வருகிறாராம். இதனால் அவருக்கு கடும் சோர்வு ஏற்பட்டுள்ளதாம்.
மேலும் படத்திற்காக சசிகுமார் தனது கெட்டப்பை மாற்ற, தாடியை எல்லாம் எடுத்து பென்சில் மீசை போன்று வைத்திருக்கிறார். நாதஸ்வர கலைஞராக சசி வேடம் ஏற்பதால் அதற்கான பயிற்சியையும் அவர் மேற்கொண்டிருக்கிறார்.
இப்படத்தினை பாலா மற்றும் சசிகுமார் இருவரும் இணைந்து தயாரிக்க இருக்கிறார்கள்

சனி, 15 மார்ச், 2014

காதல் லீலையில் கோஹ்லி- அனுஷ்கா சர்மா

கிரிக்கெட் வீரர் வீராட் கோஹ்லியும், நடிகை அனுஷ்கா சர்மாவும் கடற்கரையில் குத்தாட்டம் போட்டது அம்பலமாகியுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரரான வீராட் கோஹ்லியும், இந்தி நடிகை அனுஷ்கா சர்மாவும் காதலிப்பதாக தகவல்கள் வெளியானது.

இருவரும் இணைந்து ஷாம்பூ விளம்பரம் ஒன்றில் நடித்த போது தான், நெருக்கம் ஏற்பட்டதாம்.

இதனை தொடர்ந்து ஒன்றாகவே பல இடங்களுக்கும் சுற்றி வருகின்றனர்.

இந்நிலையில் இருவரும் இலங்கை கடற்கரையில் காதல் விளையாட்டில் ஈடுபட்ட தகவல் வெளியாகி உள்ளது.

அனுஷ்கா சர்மா சூட்டிங்குக்காக இலங்கை சென்று இருந்தார், ஆசிய கிண்ணப் போட்டியில் விளையாடி விட்டு நாடு திரும்பியவுடன் கோஹ்லி காதலியை பார்ப்பதற்காக இலங்கை சென்றுள்ளதாக தெரிகிறது.

சூட்டிங் இல்லாத சமயத்தில் இருவரும் அங்குள்ள கடற்கரையில் ஒன்றாக இணைந்து சுற்றி திரிந்தனராம்.

சனி, 1 மார்ச், 2014

காதலனை அறிவிக்க நாள் பார்க்கும் த்ரிஷா



காதலன் யார் என்பதை சரியான நேரத்தில் சொல்வேன் என்று கூறியுள்ளார் த்ரிஷா. திரையுலகிற்கு வந்து 10 வருடங்கள் ஆனாலும் இன்றுவரை ரசகிர்கள் மத்தியில் அழகு பதுமையாக வலம் வருகிறார் த்ரிஷா.
இதற்கிடையில், காதல் கிசுகிசுக்களுக்கு வேறு ப
ஞ்சமில்லை, இந்நிலையில் தன்னுடைய காதல் பற்றி த்ரிஷா கூறுகையில், சமீபகாலமாக நான் நடிகர் ராணாவை காதலிப்பதாக கிசுகிசுக்கள் வந்த வண்ணம் உள்ளன.

இதுபற்றி இப்போது எதுவும் சொல்ல விரும்பவில்லை. எந்தவொரு உறவும் குறிப்பிட்ட நேரத்தில்தான் அமையும். அதுபோல் காதலும் சரியான நேரத்தில் வரும்.
அந்தநாள் எப்போது வரும் என்று சொல்ல முடியாது. சரியான நேரம் வந்ததும் கண்டிப்பாக காதல் பற்றி வெளிப்படையாக பதில் சொல்வேன், எனது காதலன் யார் என்பதை கூறுவேன் என்றுகூறியுள்ளார்.