திங்கள், 26 ஜனவரி, 2015

ஓரங்கட்டிய சிவகார்த்திகேயன் தனுஷை ! தனுஷும் ஒரு காரணம்!

ஓரங்கட்டிய சிவகார்த்திகேயன் தனுஷை ! தனுஷும் ஒரு காரணம்! 
சிவகார்த்திகேயன் இன்று இந்த நிலைமையில் இருக்கிறார் என்றால் கண்டிப்பாக அதற்கு தனுஷும் ஒரு காரணம். ஆனால், தற்போது தனுஷையே இவர் முந்தும் அளவிற்கு வளர்ந்து விட்டார். இவர் நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும் படம் காக்கி சட்டை, 
இப்படத்தையும் தனுஷ் தான் தயாரித்துள்ளார். இந்த படத்தின் ட்ரைலர் தற்போது வரை 18 லட்சத்தை எட்டியுள்ளது. ஆனால், தனுஷின் அனேகன் படத்தின் ட்ரைலர் 17 லட்சத்தை தான் தொட்டுள்ளது, மேலும், வியாபாரத்திலும் சிவகார்த்திகேயன் கை கொஞ்சம் ஓங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

ஞாயிறு, 25 ஜனவரி, 2015

அப்படியெல்லாம் சொல்லாதீங்க..! தமிழ் திரையுலகில்??

சரத்குமாருக்கு ஜோடியாக ஐயா படம் மூலம் அறிமுகமானவர் நயன்தாரா. அதன்பிறகு தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான ரஜினி, 
விஜய், அஜித், சூர்யா தனுஷ், சிம்பு, ஆர்யா என அனைத்து ஹீரோக்களுடனும் நடித்து விட்டார். தமிழைப்போலவே 
தெலுங்கு சினிமாவிலும் முன்னணி நடிகையாக இருக்கிறார். நயன்தாராவுடன் எப்படியாவது டூயட் பாட வேண்டுமென்று துடியாய் துடித்துக்கொண்டு இருக்கின்றனர் பல இளவட்ட ஹீரோக்கள். தற்போது இருக்கும் ஹீரோக்களின் ஃபேவரட் ஹீரோயின் யார் என்றால் அது நயன்தாரா தான்.
அந்த அளவிற்கு அழகும், இவருடைய மார்கெட்டும் உச்சத்தில் இருக்கிறது. தற்போது நடிக்க வந்து 10 ஆண்டுகளுக்கு பிறகும்கூட முன்வரிசை ஹீரோக்களுக்கு ஜோடியாகவே நடித்துக்கொண்டிருக்கிறார். இதனால் நயன்தாராவை தமிழ் சினிமாவின் 
நம்பர் 1 கதாநாயகியாக கூறி வருகின்றனர். இது சமீபத்தில் நயன்தாராவின் காதில் விழுந்தால் உடனே சொன்னவர்களை அழைத்து, அப்படியெல்லாம் சொல்லாதீங்க. கோலிவுட்டில் நான் மட்டுமில்லை. எத்தனையோ நடிகைகள் இருக்கிறார்கள். எல்லா நடிகைகளுமே நம்பர் 1 தான். வெற்றி தோல்வியை அனைவருமே சந்திக்கிறோம்.
அதனால், சீனியாரிட்டியை கருத்தில் கொண்டு என்னை நம்பர்1 நடிகை என்று சொல்ல வேண்டாம். கோலிவுட்டில் இருக்கும் முன்னணி நடிகைகளில் நானும் ஒருத்தி. இங்கே யாருக்கும் எதுவும்
 நிரந்தரமில்லை என்று சொல்கிறார் நயன்தாரா. நயன்தாரா தற்போது உதயநிதியுடன் நண்பேன்டா, ஜெயம் ரவியுடன் தனி ஒருவன், 5 வயது குழந்தைக்கு தாயாக மிட் நைட் எக்ஸ்பிரஸ், விஜய் சேதுபதியுடன் நானும் ரெளடிதான், சூர்யாவுடன் மாஸ், சிம்புவுடன் இது நம்ம ஆளு போன்ற படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

சனி, 24 ஜனவரி, 2015

ஹன்சிகாவின் அனுபவ பகிர்வு! காதலிப்பது என்பது கலை!

காதலிப்பது பெரிய கலை என்று ஹன்சிகா கூறினார். ஹன்சிகாவின் ‘ஆம்பள’ படம் பொங்கலுக்கு ரிலீசாகி ஓடிக் கொண்டு இருக்கிறது. சிம்புவுடன் நடிக்கும் வாலு, ஜெயம்ரவியுடன் நடிக்கும் ரோமியோ ஜுலியட், சித்துவுடன் நடிக்கும் உயிரே உயிரே படங்கள் 
முடிவடைந்து ரிலீசுக்கு தயாராகின்றன. விஜய்யுடன் புலி படத்தில் தற்போது நடித்துக் கொண்டு இருக்கிறார். சிம்புவுடன் காதல் சர்ச்சைகளில் ஏற்கனவே சிக்கினார். இப்போது இருவரும் பிரிந்துள்ளனர். காதல் பற்றி ஹன்சிகா கூறியதாவது...
காதலிப்பது சாதாரண விஷயம் இல்லை. பெரிய கலை. பெண்களை விட ஆண்களுக்கு இந்த கலை எளிதாக வரும். ஆண்கள் காதலிக்கிறார்களா? இல்லையா? என்பது அவர்கள் கண்களை பார்த்தாலே 
தெரிந்து விடும். சிலர் பார்வையாலேயே காதலை சொல்வார்கள். பெண்ணை வைத்த கண் வாங்காமல் விழுங்கி விடுவது போல் பார்ப்பார்கள். காதலை எளிதாக சொல்லி விடவும் செய்வார்கள். பெண்கள் அப்படி இல்லை. அவர்கள் காதலிக்கிறார்களா?
 என்பதை கண்டு பிடிப்பது சிரமம்.
காதலை வெளிப்படுத்தாமல் மனதுக்குள்ளேயே வைத்து இருப்பார்கள். நீண்ட நாட்கள் கழித்துதான் காதலை சொல்வார்கள். சொந்த அனுபவம் மூலம் இவற்றை நான் தெரிந்து கொண்டதாக யாரும் கருத வேண்டாம். காதலிக்கும் தோழிகளை பார்த்துதான் இவற்றை அறிந்தேன். இவ்வாறு ஹன்சிகா கூறினார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>